ஆப்நகரம்

பறவைகளை போல சிறுவனை கூண்டில் வைத்து இருசக்கர வாகனத்தில் பயணம்-கோவையில் அதிர்ச்சி

பறவைகளை கூண்டில் அடைத்து எடுத்து செல்வது போல் சிறுவனை கூண்டுல் அடைத்து வாகனத்தில் பயணிக்கும் காட்சிகள் சமூக ஊடகங்களில் வைரலாகி உள்ளது.

Edited byசு. கணபதி சுப்பிரமணியன் | Samayam Tamil 19 Apr 2023, 5:22 pm

ஹைலைட்ஸ்:

  • பறவைகளை போல சிறுவனை கூண்டில் வைத்து இருசக்கர வாகனத்தில் பயணம்
  • சமூக வலைத்தளத்தில் வீடியோ வைரலாகி வருகிறது
  • வலைத்தள வாசிகள் கருத்து
ஹைலைட்ஸ் படிக்க - டவுண்லோட் ஆப்
Samayam Tamil Coimbatore
Coimbatore
கோவை உக்கடம்- ஈச்சனாரி சாலையில் இருசக்கர வாகனத்தின் பின்னால் கட்டப்பட்டிருந்த சிறிய ரக கூண்டிற்குள் சிறுவனை அமர வைத்தபடி இருசக்கர வாகனத்தை இயக்கி செல்லும் வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வைரலாகி வருகிறது.
திருவாரூரில் நீச்சல் குளத்தில் விளையாடி மகிழ்ந்த பாப்கட்டிங் செங்கமலம்: சமூக வலைத்தளங்களில் வீடியோ வைரல்
இருசக்கர வாகனம்
அப்பகுதியில் இருசக்கர வாகனத்தை இளைஞர் ஒருவர் இயக்கும் நிலையில், வாகனத்தின் முன்புறம் மற்றொரு இளைஞர் அமர்ந்துள்ளார். வாகனத்தில் பின்புறம் சரக்கு பொருள்களை வைக்கும் இடத்தில் சிறியரக கூண்டு ஒன்றில், சுமார் ஐந்து வயது மதிக்கத்தக்க சிறுவன் அமர்ந்தபடி பயணித்துள்ளனர்.
வீடியோ பதிவு
இதனை அவ்வழியாகச் சென்ற வாகன ஓட்டி ஒருவர் செல்போனில் வீடியோ பதிவு செய்து பேஸ்புக் போன்ற சமூக வலைத்தள பக்கங்களில் பதிவேற்றம் செய்துள்ளார். தற்போது இந்த வீடியோ வைரலாகி வருகிறது.

நகைச்சுவை
இந்த காட்சிகள் பார்ப்பதற்கு நகைச்சுவையாக இருப்பினும் பாதுகாப்பற்ற முறையில் குழந்தைகளை வைத்து பயணம் செய்ய கூடாது என வலைதளவாசிகள் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
சாத்தான்குளம் வழக்கு: விசாரணையானது இறுதி கட்டத்தை நெருங்கி விட்டது-சிபிஐ
அதிர்ச்சி
பறவைகளையே கூண்டில் வைத்து அடைக்ககூடாது என விலங்குகள் நல வாரியம் கோரிக்கை விடுத்த நிலையில் சிறுவனை கூண்டில் வைத்து அழைத்து சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
எழுத்தாளர் பற்றி
சு. கணபதி சுப்பிரமணியன்
நான் கணபதி சுப்பிரமணியன். ஊடகத்துறையில் 5 ஆண்டுகளாக பணிபுரிந்து வருகிறேன். தேசிய, சர்வதேச, சினிமா செய்திகள் எழுதிய அனுபவம் உள்ளது. இப்போது சமயம் தமிழில் மாவட்ட செய்திகள் பிரிவில் பணிபுரிந்து வருகிறேன்.... மேலும் படிக்க

அடுத்த செய்தி