ஆப்நகரம்

அழகிரி உள்பட 90 பேர் மீது 4 பிரிவுகளில் வழக்குப் பதிவு!

தடையை மீறி நோய் பரப்பும் வகையில் செயல்பட்டதாகக் காங்கிரஸ் தலைவர் அழகிரி உள்படக் காங்கிரஸ் நிர்வாகிகள் 90 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

Samayam Tamil 23 Nov 2020, 11:09 am
காங்கிரஸ் மாநில தலைவர் கே. எஸ் அழகிரி, தமிழ்நாடு மேலிடப் பொறுப்பாளர் தினேஷ் குண்டுராவ் உட்பட 90 பேர் மீது கோவை புறநகர காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
Samayam Tamil அழகிரி உள்பட 90 பேர் மீது 4 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு!
அழகிரி உள்பட 90 பேர் மீது 4 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு!


கோவை கருமத்தம்பட்டியில் மத்திய அரசின் 3 வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள் பாதுகாப்பு மாநாடு எனக் கோவை வடக்கு மாவட்ட காங்கிரஸ் கட்சி சார்பில் கூட்டம் நடைபெற்றது. இதில், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ் அழகிரி, தமிழ்நாடு காங்கிரஸ் மேலிடப் பொறுப்பாளர் தினேஷ் குண்டுராவ், கட்சி நிர்வாகிகள் என 500க்கும் மேற்பட்டோர் பங்கேற்றிருந்தனர்.

மாநாட்டை தொடர்ந்து, ஏர்கலப்பை பேரணிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதற்கிடையே இந்த பேரணிக்குக் காவல் துறையினர் தடை விதித்திருந்தனர். எனினும் காங்கிரசார் தடையை மீறி மாநாடு பந்தலிலிருந்து சுமார் 2 கிமீ தூரத்திற்கு, அதாவது நால் ரோடு சந்திப்பு வரை பேரணியாகச் சென்றனர்.

வேல் அரசியல்: மருதமலையில் பூசை அதன்பின் போலீசோடு சண்டை!

இதன் காரணமாகக் கட்சியினருக்கும், காவல் துறையினருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. ஆனால், யாரும் கைது செய்யப்படவில்லை. இந்நிலையில், மாநாட்டில் கலந்துகொண்ட காங்கிரஸ் கட்சியின் தமிழ்நாடு பொறுப்பாளர் தினேஷ் குண்டுராவ், வடக்கு மாவட்ட தலைவர் வி. எம். சி மனோகரன், மாநிலத் தலைவர் கே. எஸ் அழகிரி உட்பட 90 பேர் மீது கருமத்தம்பட்டி காவல் துறையினர் 143, 469, 471, 341 ஐ.பி.சி., பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்துள்ளனர். பொது முடக்கச் சட்ட விதிகளை மீறி சட்டவிரோதமாகக் கூடி நோயைப் பரப்பும் வகையில் செயல்பட்டது உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

அடுத்த செய்தி