ஆப்நகரம்

அனுமதியின்றி நிவாரணம் வழங்கிய அ.ம.மு.க.வினர் மீது வழக்கு

அனுமதியின்றி நிவாரணப் பொருள் விநியோகித்ததாக அமமுகவினர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

Samayam Tamil 16 May 2020, 9:56 am
கோவை: கோவையில் அனுமதியின்றி நிவாரணப் பொருட்கள் வழங்கியதாக அ.ம.மு.க.வை சேர்ந்த 7 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
Samayam Tamil கோப்புப்படம்


நாடு முழுக்க அமலில் இருக்கும் ஊரடங்கு காரணமாக, பொதுமக்கள் வாழ்வாதாரத்தை இழந்து தவித்து வரும் சூழலில், அரசு, அரசியல் கட்சிகள் மற்றும் தன்னார்வலர்கள் தங்களால் இயன்ற நிவாரணப் பொருட்களை மக்களுக்கு வழங்கி வருகின்றனர்.

இதுபோல உதவி செய்ய விரும்புவோர், அதிகாரிகளின் உரிய அனுமதி பெற்ற பிறகு சமூக விலகலைச் சரியான முறையில் கடைபிடித்து மட்டுமே நிவாரண பொருட்கள் வழங்க வேண்டும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. இந்நிலையில்,கோவை வடவள்ளி நவவூர் பிரிவில் உள்ள வெள்ளிங்கிரி நகர் பகுதியில் மக்களுக்கு அ.ம.மு.க சார்பில் நிவாரண பொருட்கள் வழங்கப்பட்டது.

இதுகுறித்து தகவலறிந்த போலீசார் அந்த இடத்திற்கு சென்றனர். மேலும், அங்கு சாமியானா அமைத்து, கட்சி கொடிகளை கட்டி, சமூக விலகலை முறையாக கடைபிடிக்காமல் நிவாரண பொருட்கள் விநியோகிப்பது தெரியவந்தது.

தமிழகத்தில் டாஸ்மாக் கடைகள் நாளை மீண்டும் திறப்பு!!

இதனை தொடர்ந்து, உரிய அனுமதியின்றி மக்களுக்கு நிவாரண பொருட்கள் வழங்கியதாக அ.ம.மு.க மத்திய மாவட்ட செயலாளர் அப்பாத்துரை, இளைஞரணி செயலாளர் தமிழ்வாணன் மற்றும் அக்கட்சியை சேர்ந்த 7 பேர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்

அடுத்த செய்தி