ஆப்நகரம்

காவேரி கூக்குரல்: ஊரூராகத் தொடரும் மரம் நடு விழா... 1 கோடி மரங்கள் இலக்கு

காவேரி கூக்குரல் தமிழ்நாடு மற்றும் கர்நாடகாவில் இதுவரை 83 லட்சம் மரக்கன்றுகளை விவசாயிகள் நட்டுள்ளனர்.

Samayam Tamil 11 Sep 2020, 3:12 pm
ஒரு கோடி மரம் நடும் தனது பயணத்தில் தொடர்ந்து செயல்பட்டு ஏறக்குறைய 90ஆயிரத்தை நோக்கி பயணித்துக்கொண்டிருக்கிறது ஈஷாவின் காவேரி கூக்குரல் இயக்கம். இதன் ஒரு பகுதியாக புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி தாலுகாவில் காவேரி கூக்குரல் இயக்கம் மற்றும் ஆவணத்தாங்கோட்டை ஊராட்சி சார்பில் மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சி செப்டம்பர் 9ஆம் தேதி நடைபெற்றது.
Samayam Tamil ஈஷா மரம் நடு விழா


இதில் ஆலங்குடி தொகுதி சட்டமன்ற உறுப்பினர் திரு.மெய்யநாதன் சிறப்பு விருந்தினராக பங்கேற்று மரக்கன்று நடும் பணியை தொடங்கி வைத்தார். அவருடன் அறந்தாங்கி வட்டாட்சியர் திரு. மார்ட்டின் லூதர் கிங், கிராம நிர்வாக அலுவலர் திரு. இளமாறன் மற்றும் ஈஷா தன்னார்வலர்களும் கலந்து கொண்டு மரக்கன்றுகளை நட்டனர். ஆவணத்தாங்கோட்டை ஊராட்சிக்கு உட்பட்ட பொது இடங்கள் மற்றும் அய்யனார் கோவில் வளாகத்தில் சுமார் 200 மரக்கன்றுகள் நடப்பட்டன.

காவேரி கூக்குரல் இயக்கத்தின் களப்பணிகள் மற்றும் பிரச்சாரத்தின் விளைவாக விவசாயிகளிடம் மரம் வளர்க்கும் ஆர்வம் பெரிதும் அதிகரித்துள்ளது. இந்த இயக்கத்தின் மூலம் தமிழ்நாடு மற்றும் கர்நாடகாவில் இதுவரை 83 லட்சம் மரக்கன்றுகளை விவசாயிகள் நட்டுள்ளனர்.


ஒரு கோடிமரக்கன்றுகளை இலக்காக வைத்து பயணித்து வரும் காவேரி கூக்குரல் குழுவினர் தமிழ்நாட்டின் உள்ளூரகப் பகுதிகள் வரை பணியாற்றி மரம் நட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

அடுத்த செய்தி