ஆப்நகரம்

கோவையில் இருசக்கர வாகனங்களில் பெட்ரோல் திருடும் கும்பல் - சிசிடிவி அதிர்ச்சி காட்சிகள்!

கோவையில் இருசக்கர வாகனத்தில் வரும் 2 இளைஞர்கள், இருசக்கர வாகனங்களில் இருந்து பெட்ரோல் திருடும் காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

Samayam Tamil 10 Mar 2019, 12:01 pm
கோவை சேரன்மாநகர் பகுதியைச் சேர்ந்தவர் கணேஷ் பிரபு. இவர் தனியார் கல்லூரியில் பேராசிரியராக பணிபுரிந்து வருகிறார். இவர் கடந்த மாதம் 17ஆம் தேதி, மதிய நேரத்தில் வழக்கம் போல வீட்டின் வெளியே இரு சக்கர வாகனத்தை நிறுத்தி வீட்டிற்குள் சென்றுள்ளார்.
Samayam Tamil cctv footage reveals the persons of petrol theft in kovai two wheelers
கோவையில் இருசக்கர வாகனங்களில் பெட்ரோல் திருடும் கும்பல் - சிசிடிவி அதிர்ச்சி காட்சிகள்!


பின்னர் வெளியே கிளம்புவதற்காக இருசக்கர வாகனத்தை ஸ்டார்ட் செய்யும் பொழுது, ஸ்டார்ட் ஆகவில்லை. இதையடுத்து கணேஷ் பிரபு தனது இருசக்கர வாகனத்தை ஆராய்ந்தபோது வாகனத்தில் இருந்த பெட்ரோல் திருடப்பட்டது தெரியவந்தது.

இதையடுத்து கணேஷ் பிரபு தனது வீட்டில் உள்ள கண்காணிப்பு கேமராவை பரிசோதனை செய்து பார்த்தார். அதில் நூதனமாக பெட்ரோல் திருடும் இளைஞர்கள் முதற்கட்டமாக டியூபை பிடுங்கி, அதில் வாட்டர் கேன் ஐ வைத்து விட்டு சென்று விடுகின்றனர்.

பின்னர் சிறிது நேரம் ஆனவுடன் பெட்ரோல் நிரம்பியதும் மீண்டும் அந்த பெட்ரோல் திருடும் இளைஞர்கள் ஆட்கள் யாரும் இல்லாத நேரத்தில் பெட்ரோல் கேனை எடுத்து சென்று விடுகின்றனர். இந்த காட்சிகள் கண்காணிப்பு கேமராவில் தெளிவாக பதிவாகியிருந்தது.

இந்த காட்சிகள் கடந்த சில நாட்களாக சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. இளைஞர்கள் ஒரு சிலர் தற்போது நூதனமாக திருடுவதில் தங்கள் திறமைகளை காட்டி வருவது பெற்றோர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

அடுத்த செய்தி