ஆப்நகரம்

சென்னை போலீஸ் உதவி கமிஷனருக்கு பிடிவாரன்ட்!

சென்னை நீலாங்கரை உதவி கமிஷனருக்கு பிடிவாரன்ட் கொடுத்து கோயம்புத்தூர் மாஜிஸ்திரேட் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

Samayam Tamil 3 Feb 2019, 8:12 pm
சென்னை நீலாங்கரை உதவி கமிஷனருக்கு பிடிவாரன்ட் கொடுத்து கோயம்புத்தூர் மாஜிஸ்திரேட் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
Samayam Tamil coimba


கோவை: கோவை மாநகர போக்குவரத்து புலனாய்வு பிரிவில் கிழக்கு மற்றும் மத்திய பகுதியில் கடந்த 2014ல் இன்ஸ்பெக்டராக பணிபுரிந்தவர் சீனிவாசலு. அவர் பணிபுரிந்த சமயத்தில் 17 விபத்து வழக்குகளில் விசாரணை அதிகாரியாக இருந்தார். இவ்வழக்கு தொடர்பாக கோவை ஜே.எம் 8 கோர்ட்டில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தார். கோர்ட்டில் விசாரணை நடந்து வரும் நிலையில் சீனிவாசலு ஆஜராகி சாட்சியளிக்கவில்லை. இதனால் சீனிவாசலுக்கு பல முறை சம்மன் அனுப்பப்பட்டது. இருந்த போதும் அவர் ஆஜராகவில்லை.

இந்த வழக்கு மாஜிஸ்திரேட் பாலமுருகன் தலைமையில் நேற்று முன்தினம் விசாரணைக்கு வந்தது. அப்போதும் ஆஜராகாததால் சீனிவாசலுவுக்கு பிடிவாரன்ட் பிறப்பிக்கப்பட்டது. சீனிவாசலு தற்போது சென்னை நீலாங்கரை ஏசியாக உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

அடுத்த செய்தி