ஆப்நகரம்

3ஆவது அலை பீதிக்கு நடுவே கோவையில் உதயநிதி ஸ்டாலின் கொரோனாவை பரப்பியுள்ளார்!

கோவை மாவட்டத்தில் கொரோனா 3ஆவது அலை தொடங்கிவிட்டதா என்ற அச்சம் எழுந்துள்ள நிலையில் சேப்பாக்கம் திமுக எம்எல்ஏ உதயநிதி ஸ்டாலின் வருகையால் தொற்று பரவல் அதிகரிக்க வாய்ப்பு உருவாக்கப்பட்டுள்ளது.

Samayam Tamil 11 Jun 2021, 11:41 pm
கோவை மாவட்டம் கிணத்துக்கடவு தொகுதிக்கு உட்பட்ட குறிச்சி பகுதியில் 500க்கும் மேற்பட்ட இஸ்லாமியக் குடும்பங்களுக்கு நிவாரண பொருட்களை உதயநிதி ஸ்டாலின் எம்எல்ஏ வழங்கினார்.
Samayam Tamil 3ஆவது அலை பீதிக்கு நடுவே கோவையில் உதயநிதி ஸ்டாலின் கொரோனாவை பரப்பியுள்ளார்!


கோவை கிணத்துக்கடவு தொகுதிக்கு உட்பட்ட குறிச்சி பகுதியில் திமுக சார்பாக 500க்கும் மேற்பட்ட இஸ்லாமியக் குடும்பங்களுக்கு அரிசி, காய்கறி, மளிகை பொருட்களை அரசு சார்பில் 15 பொருட்கள் அடங்கிய கொரோனா நிவாரண தொகுப்பை உதயநிதி ஸ்டாலின் வழங்கினார்.

வார்டு செயலாளர் எஸ்ஏ காதர் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில், அமைச்சர்கள் சக்கரபாணி, இராமச்சந்திரன் முன்னாள் அமைச்சர் பொங்கலூர் பழனிச்சாமி, புறநகர் கிழக்கு மாவட்ட பொறுப்பாளர் மருதமலை சேனாதிபதி, வடக்கு மாவட்ட பொறுப்பாளர் சிஆர் இராமச்சந்திரன், தீர்மான குழு இணைச்செயலாளர் முத்துச்சாமி, பொறுப்புக்கும் உறுப்பினர் குறிச்சி பிரபாகரன் பொதுக்குழு உறுப்பினர் ஜஹாங்கீர் மற்றும் மாவட்ட நிர்வாகிகள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்துகொண்டனர்.

கோவை: 108 ஆம்புலன்சில் பிறந்த குழந்தை: அதிரடி சம்பவங்கள்!
எனினும் உதயநிதி வருகை காரணமாகக் குறிப்பிட்ட பகுதியில் ஆயிரக்கணக்கான உடன் பிறப்புகள் கூடியிருந்தனர். ஏற்கனவே கோவை மாவட்டத்தில் கொரோனா 3ஆவது அலை தொடங்கிவிட்டதாகப் போலியான செய்திகள் பரவி வரும் சூழலில், இந்த கூட்டம் பெரும் பீதியைக் கிளப்பியுள்ளது.

இதுபோன்ற அவசரக் காலங்களில் அரசியல் தலைவர்கள் தங்கள் கட்சி தொண்டர்களைச் சரியாக வழி நடத்த வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கேட்டுக் கொண்டுள்ளனர்.

அடுத்த செய்தி