ஆப்நகரம்

பள்ளிவாசல் சென்றவர் தொலைத்த ஒரு லட்சம், மர்ம நபர் செய்த காரியத்தால் சுற்றி வந்தடைந்த கதை!

பள்ளிவாசலுக்கு சென்ற இடத்தில் ரோட்டில் தவறவிட்ட பணம், நேர்மையான மனிதர் ஒருவர் கையில் சிக்கியதைத் தொடர்ந்து அது அதன் உரிமையாளரை மீண்டும் சென்றடைந்தது...

Samayam Tamil 27 Nov 2020, 9:24 am
கோவை மாவட்டம் சாலை ஒன்றில் கிடந்த ரூ. ஒரு லட்சம் ரொக்கத்தைப் பெயர் குறிப்பிட விரும்பாத நபர் காவல் துறையினரிடம் ஒப்படைத்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Samayam Tamil பள்ளிவாசல் சென்றவர் தொலைத்த ஒரு லட்சம், மர்ம நபர் செய்த காரியத்தால் சுற்றி வந்தடைந்த கதை!
பள்ளிவாசல் சென்றவர் தொலைத்த ஒரு லட்சம், மர்ம நபர் செய்த காரியத்தால் சுற்றி வந்தடைந்த கதை!


கோவை மாவட்டம், செட்டி பாளையம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் யாரோ தவறவிட்ட ரூபாய் ஒரு லட்சம் சாலையில் கிடந்துள்ளது. அந்தப் பணத்தைக் கண்ட பெயர் குறிப்பிட விரும்பாத நபர் ஒருவர் செட்டி பாளையம் காவல் நிலைய உதவி ஆய்வாளர் அருள்பிரகாசிடம் ஒப்படைத்துள்ளார்.

பணத்தைத் தொலைத்த நபர், தகுந்த அடையாளத்தைக் கூறி, காவல் நிலையத்தில் பெற்றுக் கொள்ளுமாறு கோவை மாவட்டக் காவல் துறையின் சார்பாகப் பத்திரிகைகளில் அறிவிப்பு வெளியிடப்பட்டது.இந்தப் பத்திரிக்கை செய்தியை அடுத்து போத்தனூரைச் சேர்ந்த இஸ்மாயில் என்பவர் பணத்தை உரிமை கோரி காவல் நிலையம் வந்திருந்தார்.

இல்லாதவர்களுக்காகத் துடிக்கும் கோவை போலீஸ் இன்ஸ்பெக்டர்!

விசாரணையில், இஸ்மாயில் பள்ளிவாசலுக்குச் சென்று தொழுகையை முடித்து வீட்டுக்குத் திரும்பும்போது பணத்தைத் தவற விட்டது தெரியவந்தது. இதையடுத்து இஸ்மாயில் தகுந்த சாட்சிகளைக் கொடுத்து, அடையாளங்களைக் கூறி செட்டி பாளையம் காவல் நிலைய உதவி ஆய்வாளர் அருள்பிரகாசிடமிருந்து பணத்தைப் பெற்றுக் கொண்டார். இஸ்மாயில் பணத்தைத் திரும்பப் பெறக் காரணமாக இருந்தவர்களுக்கு நன்றி தெரிவித்துக் கொண்டார்.

அடுத்த செய்தி