ஆப்நகரம்

கோவை: மின்விளக்குகள் எரிவதே இல்லை தீப்பந்தம் ஏந்தி போராட்டம்!

மேட்டுப்பாளையம் நகராட்சி பகுதியில் மின்விளக்குகள் எரியாததைக் கண்டித்து சிஐடியூ தொழிற்சங்கத்தினர் தீப்பந்தம் ஏந்தி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Samayam Tamil 20 Jun 2021, 11:00 pm
கோவை மாவட்டம், மேட்டுப்பாளையம் நகராட்சி பகுதியில் உள்ள ராமப்பா ரோட்டில் நகராட்சி தெருவிளக்கு கடந்த ஒரு வாரமாக எரியவில்லை.
Samayam Tamil கோவை: மின்விளக்குகள் எரிவதே இல்லை தீப்பந்தம் ஏந்தி போராட்டம்!


இதனால் அப்பகுதி முழுவதும் இருள் சூழ்ந்து காணப் படுகிறது. குறிப்பாகப் பகுதியில் சுமார் 300க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன.

தெருவிளக்குகளைச் சீரமைத்துத் தருமாறு நகராட்சி நிர்வாகத்திடம் தொடர்ந்து கோரிக்கை வைத்தும் நகராட்சி நிர்வாகம் சார்பில் எந்தவித நடவடிக்கையும் எடுக்க வில்லை.
சாதியை வளர்க்கும் சசிகலா; நெருங்கிய முன்னாள் அமைச்சர் பொளேர்!
இதனால் சிஐடியு பொதுத் தொழிலாளர் சங்க பொதுச்செயலாளர், பாஷா தலைமையில் கைகளில் தீப்பந்தங்களை ஏந்தி நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அடுத்த செய்தி