ஆப்நகரம்

பிரச்சாரங்களைப் பாதியிலே நிறுத்தும் முதல்வர்: எதற்காக செய்கிறார் தெரியுமா..?

சென்னை அருகே உள்ள காஞ்சிபுரத்தில் பிரச்சாரத்தின்போது முதல்வர் தனது வாகனத்தை நிறுத்தியது பெரும் செய்தியாக எழுந்த நிலையில், இப்போது கோவையிலும் அதேபோல் செய்திகள் வெளியாகி வருகின்றன.

Samayam Tamil 24 Jan 2021, 1:43 pm
கோவை சிங்காநல்லூரில் இரண்டாவது நாள் பிரச்சாரத்தைத் துவக்கிய முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்குத் திருச்சி சாலை கக்கன் நகர்ப் பகுதியில் தமிழக பாரம்பரிய கலைகளுடன் வரவேற்பு அளிக்கப்பட்டது.
Samayam Tamil பிரச்சாரங்களைப் பாதியிலே நிறுத்தும் முதல்வர்: எதற்காக செய்கிறார் தெரியுமா..?
பிரச்சாரங்களைப் பாதியிலே நிறுத்தும் முதல்வர்: எதற்காக செய்கிறார் தெரியுமா..?


கோவை மாவட்டத்திற்கு இரண்டு நாட்கள் பிரச்சாரம் மேற்கொண்டு வரும் தமிழக முதல்வர் இன்று இரண்டாவது நாள் பிரச்சாரத்தைத் துவக்கினார்.

தேர்தல் பிரச்சாரத்திற்கு எந்த ஊருக்குச் சென்றாலும் அங்குள்ள பிரபல கோவில்களில் தரிசனம் செய்வதை வழக்கமாக முதல்வர் கொண்டுள்ளார்.

முதல்வர் வரவேற்புக்கு வைத்த கரும்புகளை அள்ளிச் சென்ற மக்கள்

இந்த சூழலில் கோவையில் இரண்டாவது நாள் பிரச்சாரத்தை உலகில் மிகப் பெரிய விநாயகர் சிலை அமைந்துள்ள புலியகுளம் விநாயகர் கோயிலில் தரிசனம் செய்து விட்டு பிரச்சாரத்தை ஆரம்பித்தார்.

சிங்காநல்லூரில் இரண்டாவது நாள் பிரச்சாரத்தைத் துவங்கிய நிலையில் அவருக்கு வழியில் தமிழக பாரம்பரிய கலைகளுடன் பிரம்மாண்ட வரவேற்பு அளிக்கப்பட்டது. தொடர்ந்து அவர் திருச்சி சாலை வழியாக சிங்காநல்லூர் கரும்பு கடை மைதானத்தில் பிரச்சாரம் செய்தார்.

அடுத்த செய்தி