ஆப்நகரம்

கொரோனா தடுப்பு நடவடிக்கை: கிருமி நாசினி தெளிக்க கோவையில் நூதன வாகனம்

வாகனத்தில் 16 ஆயிரம் லிட்டர் நீர் நிரப்ப முடியும். நீருடன் பீலீச்சீங்க் பவுடர் கலந்து, சாலைகளில் தெளிக்கும் பணியில் மாநகர காவல்துறையினர் ஈடுபட்டுள்ளனர்

Samayam Tamil 27 Mar 2020, 7:30 pm
கோவை: வன்முறைகளை தடுக்க பயன்படுத்தப்படும் தண்ணீர் அடிக்கும் வாகனத்தை, கொரோனா தடுப்பு நடவடிக்கைக்கு உபயோகப்படுத்தும் பணியில் கோவை மாநகர காவல்துறையினர் ஈடுபட்டுள்ளனர்.
Samayam Tamil கிருமி நாசினி தெளிக்கும் வாகனம்
கிருமி நாசினி தெளிக்கும் வாகனம்


கொரோனா வைரஸ் சமூக பரவலை கட்டுக்குள் கொண்டு வர வருகிற ஏப்ரல் மாதம் 21ஆம் தேதி வரை ஊரடங்கு உத்தரவை பிரதமர் மோடி பிறப்பித்துள்ளார். அதுதவிர பல்வேறு விழிப்புணர்வு நடவடிக்கைகளிலும் மத்திய, மாநில அரசுகள் ஈடுபட்டுள்ளன.

அந்த வகையில், கொரோனா தடுப்பு நடவடிக்கையாக கோவை மாவட்டத்தில், உள்ளாட்சித் துறை, காவல்துறை, வருவாய்த்துறை, சுகாதாரத்துறை என பல்வேறு துறைகள் ஒன்றிணைந்து தூய்மை, சரீர விலகலை கடைபிடிக்க வைப்பது, பொதுமக்களிடையே கொரோனா குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்துவது உள்ளிட்ட பல தடுப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

உள்ளே இருந்துதான் கொரோனாவை வெளியே அனுப்ப முடியும் - முதல்வர் பேட்டி

இந்நிலையில், போராட்டங்களை கலைக்க, வன்முறைகளை தடுத்து கூட்டத்தை கட்டுப்படுத்த காவல்துறையினரால் பயன்படுத்தப்படும் தண்ணீரை பாய்ச்சி அடிக்கும் வாகனத்தை கொரோனா தடுப்பு நடவடிக்கைக்கு பயன்படுத்த திட்டமிட்டு அதற்கான பணிகளில் அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர்.

இந்த வாகனத்தில் 16 ஆயிரம் லிட்டர் நீர் நிரப்ப முடியும். நீருடன் பீலீச்சீங்க் பவுடர் கலந்து, சாலைகளில் தெளிக்கும் பணியில் மாநகர காவல்துறையினர் ஈடுபட்டுள்ளனர். காவல் ஆய்வாளர் தலைமையில், காவல் துணை ஆய்வாளர் ஒருவர், 2 காவலர்கள் உதவியுடன் முழுவதும் காவல்துறையினரால் இந்த சாலைகளில் கிருமி நாசினி தெளிக்கும் பணி வரும் நாட்களில் நடைபெறவுள்ளது.


முதற்கட்டமாக, மாவட்ட ஆட்சியர், மாநகர் காவல் ஆணையர் அலுவலகம், அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை வளாகம் அமைந்துள்ள பகுதிகளில் உள்ள சாலைகளில் இந்த பணி மேற்கொள்ளப்பட்டது. தொடர்ந்து, அடுக்குமாடி குடியிருப்புகள் கொண்ட சாலைகள் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இந்த பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளதாக மாநகர காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

அடுத்த செய்தி