ஆப்நகரம்

கோவை விபத்து, தலா ஒரு லட்சம் அறிவித்தார் முதல்வர் பழனிசாமி!

தமிழ்நாட்டையே சோகத்தில் ஆழ்த்தியுள்ள கோவை கட்டிட விபத்தில் சிக்கி இதுவரை 2 பேர் உயிரிழந்துள்ளனர் என்ற செய்தி வெளியாகியுள்ள நிலையில், சம்பந்தப்பட்ட குடும்பத்தாருக்கு ரூ. ஒரு லட்சம் வழங்க முதல்வர் முன் வந்துள்ளார்...

Samayam Tamil 7 Sep 2020, 5:22 pm
கோவையில் பெய்த கனமழை காரணமாகக் கட்டிடம் இடிந்து விழுந்து விபத்துக்குள்ளானதில் இருவர் உயிரிழந்தனர். இதையடுத்து உயிரிழந்தவர்களின் குடும்பத்தாருக்கு தலா ரூ. ஒரு லட்சம் வங்க முதல்வர் பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.
Samayam Tamil coimbatore building collapse cm announces one lakh for family of dead
கோவை விபத்து, தலா ஒரு லட்சம் அறிவித்தார் முதல்வர் பழனிசாமி!


இதுதொடர்பாக முதல்வர் பழனிசாமி வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது :
கோயம்புத்தூர் மாவட்டம் கொமாராபாளையம் கிராமத்தைச் சேர்ந்த தனியாருக்குச் சொந்தமான பழைய இரண்டு அடுக்கு மாடி வீடு நேற்று (செப். 6ஆம் தேதி) எதிர்பாராத விதமாக இடிந்து விழுந்தது. இந்த விபத்து காரணமாக அருகிலிருந்த ஓட்டு வீடும் முழுமையாக இடிந்து விழுந்தது.

இந்த விபத்தில் கான்கிரீட் கட்டிடத்திலிருந்த கண்ணன் என்பவரின் மனைவி சுவேதா என்கிற ஷாலினி, ஓட்டு வீட்டிலிருந்த கருப்பண்ண என்பவரின் மகன் கோபால் சாமி ஆகிய இருவரும் பரிதாபமாக உயிரிழந்தனர். இந்தச் செய்தியை அறிந்து நான் மிகுந்த வேதனை அடைந்தேன்.

இந்த துயரச் சம்பவத்தில் உயிரிழந்த இருவரின் குடும்பத்தாருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன். இந்த விபத்தில் 6 நபர்கள் காயமடைந்துள்ளனர். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் அனைவரும் பூரண குணமடைந்து விரைவில் வீடு திரும்ப வேண்டும்.

இனி ஒளிய முடியாது, வீடு வீடாக கொரோனா சோதனை!

இந்த செய்தி குறித்து அறிந்தவுடன், உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மீட்பு நடவடிக்கைகளை விரைந்து மேற்கொள்ளவும், பாதிக்கப்பட்டவர்களுக்கு உரியச் சிகிச்சை அளிக்கவும், உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறவும் கோயம்புத்தூர் மாவட்ட ஆட்சியருக்கு உத்தரவிட்டுள்ளேன். பொது நிவாரண நிதியிலிருந்து உயிரிழந்தவர்கள் குடும்பத்திற்கு தலா ரூ. ஒரு லட்சம் ரூபாய் வழங்க உத்தரவிட்டுள்ளேன்.
இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டிருந்தது.

அடுத்த செய்தி