தனிப்படை போலீசாருக்கு கோவை காவல் ஆணையர் பாராட்டு!!
கோவையில் பிரபல கோயில் ஒன்றின் முன் மாட்டிறைச்சியை வீசி சென்ற மர்ம் நபரை கைது செய்த தனிப்படை போலீசாருக்கு காவல் ஆணையர் வெகுவாக பாராட்டினார்.
Samayam Tamil 2 Jun 2020, 11:24 pm
கோவை டவுன்ஹாலை அடுத்த சலீவன் வீதியில் வேணுகோபால கிருஷ்ணசுவாமி கோயில் அமைந்துள்ளது. கொரோனா காரணமாக இந்த கோயிலும் மூடப்பட்டுள்ளது.
இந்த நிலையில், கடந்த வெள்ளிக்கிழமை (மே 29) காலை கோயில் கதவின் முன்பு மர்ம நபர்கள் இறைச்சியை கொட்டிச் சென்றுள்ளனர்.
இதனை அறிந்த அப்பகுதி மக்கள் அதிர்ச்சியடைந்தனர். இதுகுறித்து வெரைட்டி ஹால் ரோடு போலீசாருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது.
கோவில் முன்பு மாட்டிறைச்சியை வீசிச்சென்ற மர்ம நபர்கள், கோவையில் பரபரப்பு..!
இதையடுத்து, இந்த தகாத செயலை செய்த மர்ம நபர்களை கண்டுபிடிக்க, சட்டம் -ஒழுங்கு காவல் துணை ஆணையர் தலைமையில் தனிப்படையை அமைத்து, கோவை மாநகர காவல் ஆணையர் சுமித் சரண் உத்தரவிட்டார்.
இந்த சம்பவம் குறித்து தனிப்படை போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வந்தனர். இந் நிலையில், கவுண்டம்பாளையம், பிருந்தாவன் நகரைச் சேர்ந்த ராம்பிரகாஷ் (48) என்ற வாலிபரை போலீஸார் இன்று கைது செய்தனர்.
குடிகார மகனால் தந்தைக்கு நேர்ந்த சோகம்
கோவை மாநகரின் அமைதிக்கு பங்கம் ஏற்படுத்தும் நோக்கில், கோயில் முன் இறைச்சியை வீசி சென்ற நபரை விரைந்து கைது செய்தற்காக, தனிப்படை போலீசாரை, கோவை மாநகர காவல் ஆணையர் இன்று வெகுவாக பாராட்டி சான்றிதழ் வழங்கினார்.
இந்த நிலையில், கடந்த வெள்ளிக்கிழமை (மே 29) காலை கோயில் கதவின் முன்பு மர்ம நபர்கள் இறைச்சியை கொட்டிச் சென்றுள்ளனர்.
இதனை அறிந்த அப்பகுதி மக்கள் அதிர்ச்சியடைந்தனர். இதுகுறித்து வெரைட்டி ஹால் ரோடு போலீசாருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது.
கோவில் முன்பு மாட்டிறைச்சியை வீசிச்சென்ற மர்ம நபர்கள், கோவையில் பரபரப்பு..!
இதையடுத்து, இந்த தகாத செயலை செய்த மர்ம நபர்களை கண்டுபிடிக்க, சட்டம் -ஒழுங்கு காவல் துணை ஆணையர் தலைமையில் தனிப்படையை அமைத்து, கோவை மாநகர காவல் ஆணையர் சுமித் சரண் உத்தரவிட்டார்.
இந்த சம்பவம் குறித்து தனிப்படை போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வந்தனர். இந் நிலையில், கவுண்டம்பாளையம், பிருந்தாவன் நகரைச் சேர்ந்த ராம்பிரகாஷ் (48) என்ற வாலிபரை போலீஸார் இன்று கைது செய்தனர்.
குடிகார மகனால் தந்தைக்கு நேர்ந்த சோகம்
கோவை மாநகரின் அமைதிக்கு பங்கம் ஏற்படுத்தும் நோக்கில், கோயில் முன் இறைச்சியை வீசி சென்ற நபரை விரைந்து கைது செய்தற்காக, தனிப்படை போலீசாரை, கோவை மாநகர காவல் ஆணையர் இன்று வெகுவாக பாராட்டி சான்றிதழ் வழங்கினார்.