ஆப்நகரம்

14 வயது சிறுமியை கர்ப்பமாக்கி தப்பியோடிய அண்ணன்; தேடுதல் வேட்டையில் கோவை போலீசார்!

கோவை: தங்கையை பாலியல் வன்கொடுமை செய்து அண்ணன் தப்பிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Samayam Tamil 24 Dec 2018, 9:43 pm
கோவையைச் சேர்ந்த 14 வயது பள்ளிச் சிறுமி 6 மாத கர்ப்பிணியாக இருந்துள்ளார். இவரது கருவைக் கலைக்க கோவை மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு வந்துள்ளனர்.
Samayam Tamil Rape


இதுகுறித்து கோவை போலீசார் மற்றும் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அதிகாரிகளுக்கு தகவல் அளிக்கப்பட்டது. உடனே மருத்துவமனைக்கு விரைந்த அவர்கள், சிறுமியின் கர்ப்பம் குறித்து விசாரித்தனர்.

அதில் சிறுமியின் உடன் பிறந்த மூத்த அண்ணன் பாலியல் வன்கொடுமை செய்து தப்பியது தெரியவந்தது. இந்நிலையில் இந்த கொடூர சம்பவம் குறித்து செல்வபுரம் போலீசாரிடம் புகார் அளிக்குமாறு அதிகாரிகள் அறிவுறுத்தினர்.

இதுகுறித்து அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். இந்த சூழலில் தப்பியோடிய இளைஞரை தேடும் பணி தொடங்கப்பட்டுள்ளதாக போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இன்னும் 2 நாட்களில் பிடித்து, எஃப்.ஐ.ஆர் பதிவு செய்யப்படும் என்று போலீசார் கூறினர். மேலும் தற்போது எஃப்.ஐ.ஆர் பதிவு செய்தால், இதுகுறித்து உஷார் அடைந்து இளைஞர் தப்பியோட வாய்ப்பிருப்பதாக தெரிவித்தனர்.

அடுத்த செய்தி

Tamil News App:
முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு Samayam Tamil ஃபேஸ்புக்பக்கத்துடன் தொடர்ந்திருங்கள்