ஆப்நகரம்

3600 மருத்துவ முகாம்கள்: அசத்தும் கோவை!

கோவையில் 3600 மருத்துவ முகாம்கள் நடத்தப்பட்டுள்ளதாக மாநகராட்சி ஆணையர் ஷ்ரவன் குமார் தெரிவித்துள்ளார்.

Samayam Tamil 6 Aug 2020, 9:04 pm

கோவை மாநகராட்சியில் கடந்த மாதம் மட்டும் சுமார் 3600 சளி, காய்ச்சல் பரிசோதனை மருத்துவ முகாம்கள் நடத்தப்பட்டுள்ளதாகவும், இந்த முகாம்கள் கொரோனா நோயாளிகளை எளிதில் கண்டறிய பயனுள்ளதாக இருப்பதாக மாநகராட்சி ஆணையர் ஷ்ரவன் குமார் ஜடாவத் தெரிவித்துள்ளார்.
Samayam Tamil மாநகராட்சி ஆணையர் ஷ்ரவன் குமார்


கொரோனா வைரஸ் தற்போது வேகமாக பரவி வரும் நிலையில் கோவை மாநகராட்சியில் பணி புரியும் தூய்மை பணியாளர்களின் பாதுகாப்பு கருதி தேன்கூடு தொண்டு நிறுவனத்தின் சார்பாக தூய்மை பணியாளர்களுக்கென ஹோமியோபதி நோய் தடுப்பு மருந்தான ஆர்சணிக் ஆல்பமின் மாத்திரைகள் மற்றும் 1000 N-95 வகை முகக் கவசங்கள் மாநகராட்சி ஆணையர் ஷ்ரவன் குமார் ஜடாவத்திடம் வழங்கப்பட்டது.



இவற்றை தேன்கூடு நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் மணிவண்ணபிரபு மற்றும் இயக்குநர் வழக்கறிஞர் சுந்தரவடிவேலு ஆகியோர் வழங்கினர். இந்நிகழ்வில் தேன்கூட்டின் தலைவர் நீதிபதி பாலசந்தர், டாக்டர் பிரசாந்த் , முன்னால் மேயர் ராஜ்குமார் ஆகியோர் கலந்து கொண்டனர். இதனை தொடர்ந்து மாநகராட்சி ஆணையர் ஷ்ரவன் குமார் ஜடாவத் செய்தியாளர்களிடம் பேசினார்.

அப்போது அவர், “கோவை மாநாகராட்சி பகுதிகளில் கடந்த மாதம் மட்டும் சுமார் 3600 மருத்துவ பரிசோதனை முகாம்கள் நடத்தப்பட்டுள்ளதாகவும். இவற்றில் ஐந்து இலட்சத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர். பெரும்பாலான இடங்களில் மருத்துவ முகாம்கள் நடத்தப்பட்டு, பொதுமக்களுக்கு காய்ச்சல் மற்றும் சளி உள்ளதா என பரிசோதனை மேற்கொள்ளப்படுகிறது.

கொரோனாவை அழிக்கும் டெக்னாலஜி: கெத்து காட்டிய கோவைக்காரர்கள்!

சளி, காய்ச்சல் இருப்பின் அவர்களின் இருப்பிடத்திற்கே தகுந்த பாதுகாப்புடன் சென்று கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்படுகிறது. இது போன்ற மருத்துவ முகாம்கள் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட நோயாளிகளை கண்டறிய பயனுள்ளதாக இருக்கின்றன” என்று தெரிவித்துள்ளார்.

அடுத்த செய்தி