Coimbatore Corporation Mayor Kalpana Anandakumar Sudden Visit To Several Welfare Schemes In A Single Day
ரவுண்ட் கட்டிய கோவை மேயர் கல்பனா... திடீர் ஆய்வால் தடதடத்த அதிகாரிகள்!
கோவை மாநகராட்சி பகுதியில் நடைபெற்று வரும் வளர்ச்சித் திட்டப் பணிகளை மேயர் கல்பனா ஆனந்தகுமார் நேரில் ஆய்வு செய்தார்.
Samayam Tamil19 Jan 2023, 2:31 pm
கோவை மாநகராட்சியின் பல்வேறு இடங்களில் நடைபெற்று வரும் பணிகளை திடீர் ஆய்வு செய்ய மேயர் கல்பனா ஆனந்தகுமார் முடிவு செய்தார். அதன்படி, கோவை வடக்கு மண்டலத்திற்கு உட்பட்ட துடியலூர் மார்க்கெட் பகுதியில் நுண்ணுயிர் உரம் தயாரிக்கும் மையத்தை (Micra Composting Centre) நேரில் பார்வையிட்டு அதன் செயல்பாடுகள் குறித்து கேட்டறிந்தார். பின்னர் அதே பகுதியில் 1.83 லட்ச ரூபாய் மதிப்பீட்டில் நடைபெற்று வரும் கழிப்பிட கட்டுமானப் பணிகளை ஆய்வு செய்தார்.
கோவை மேயர் திடீர் ஆய்வு
விரைவாகவும், தரமாகவும் செய்து முடித்து பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் சம்பந்தப்பட்ட பொறியாளருக்கு அறிவுறுத்தினார். இதையடுத்து துடியலூர் பகுதியில் உள்ள நகர்நல மையத்திற்கு சென்றார். அங்குள்ள நோயாளிகளிடம் சிகிச்சை முறைகள் குறித்தும், தாய் சேய் நலம் குறித்தும், மருந்து மாத்திரைகளின் இருப்பு குறித்தும் கேட்டறிந்தார்.
கட்டுமானப் பணிகள்
இதன் தொடர்ச்சியாக அப்பநாயக்கன் பாளையம் பகுதியில் 69 லட்ச ரூபாய் மதிப்பில் கட்டப்பட்டு வரும் நுண்ணுயிர் உரம் தயாரிக்கும் மைய கட்டுமானப் பணிகள், 25 லட்ச ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்ட நகர்நல மையம், கலைஞர் நகர் பகுதியில் 200 மீட்டர் தொலைவிற்கு 4.95 லட்ச ரூபாய் மதிப்பீட்டில் புதிதாக தார் சாலை ஆகியவற்றை ஆய்வு செய்தார்.
இதனைத் தொடர்ந்து பி.ஆர்.எம் கார்டன் முதல் துடியலூர் சந்திப்பு வரை மழைநீர் வடிகால் கட்டுவதற்கு உரிய திட்ட மதிப்பீடு தயாரிக்க வேண்டும் என்று பொறியாளரிடம் அறிவுறுத்தினார். நல்லாம்பாளையம், ஜெயந்தி நகர் பகுதியில் 25 லட்ச ரூபாய் மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்ட நகர்நல மைய கட்டுமானப் பணியினை ஆய்வு செய்து பணிகளை விரைவாகவும், தரமாகவும் செய்து முடித்து மாணவர்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் எனக் கேட்டுக் கொண்டார்.
பரபரப்பான கோவை
கவுண்டம்பாளையம் ராமசாமி நகர் பகுதியில் நுண்ணுயிர் உரம் தயாரிக்கும் மையத்தினை ஆய்வு செய்து அவற்றின் செயல்பாடுகள் பற்றி கேட்டறிந்தார். பின்பு ராமசாமி நகர மாநகராட்சி மேல்நிலைப் பள்ளியில் 90 லட்ச ரூபாய் மதிப்பீட்டில் கூடுதல் வகுப்பறைகளின் கட்டுமானப் பணிகளை நேரில் பார்வையிட்டார். ஒரே நாளில் கோவையின் பல்வேறு பகுதிகளில் மேயர் கல்பனா ஆனந்தகுமார் மேற்கொண்ட ஆய்வால் அதிகாரிகள் மிகவும் பரபரப்பாக காணப்பட்டனர்.
இந்த ஆய்வின் போது வடக்கு மண்டல தலைவர் வே.கதிர்வேல், மாமன்ற உறுப்பினர்கள் புஷ்பமணி, கற்பகம், ராதா கிருஷ்ணன், உதவி ஆணையர் மோகன கத்தரி, உதவி செயற்பொறியாளர் செந்தில் பாஸ்கர், உதவி நகரமைப்பு அலுவலர் விமலா, மண்டல சுகாதார அலுவலர் ராதாகிருஷ்ணன், உதவிப் பொறியாளர் ஜெயின்ராஜ், சுகாதார ஆய்வாளர் பௌன்ராஜ் மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் உடனிருந்தனர்.
We use cookies and other tracking technologies to provide services in line with the preferences you reveal while browsing the Website to show personalize content and targeted ads, analyze site traffic, and understand where our audience is coming from in order to improve your browsing experience on our Website. By continuing to browse this Website, you consent to the use of these cookies. If you wish to object such processing, please read the instructions described in our privacy policy/cookie policy.