ஆப்நகரம்

கொரோனா ஆடை அணிந்து கலெக்டரை சந்தித்த நடனக் கலைஞர்கள்!

கொரோனாவால் தொழில் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் கோவை நடனக் கலைஞர்கள் கொரோனா மாதிரி ஆடை அணிந்துவந்து மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கைகளை முன்வைத்தனர்.

Samayam Tamil 20 May 2020, 8:21 pm
கோவை மாவட்ட நடனக் கலைஞர்கள் கோவை மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிப்பதற்காக இன்று ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்திருந்தனர். அப்போது அவர்கள் கொரோனா மாதிரி வடிவமைப்பு உடையுடன் வந்து கோரிக்கை வைத்தனர். இதகுறித்து அவர்கள் பேசுகையில், “கொரோனா கொள்ளை நோய் காரணமாக கடந்த இரண்டு மாதங்களாக வருமானம் இல்லாமல் முடங்கி கிடக்கிறோம். இத்தொழிலை நம்பி உள்ள நடனக் கலைஞர்களின் வாழ்வாதாரம் கடுமையாக பாதிக்கபட்டுள்ளது.
Samayam Tamil கோவை நடனக் கலைஞர்கள்


இந்த நடனத் தொழில் நலிவடைந்து விடாமல் பாதுகாக்கும் நோக்கில் சேவ் & சப்போர்ட் டான்ஸ் இண்டஸ்ட்ரீஸ் என்ற அமைப்பை துவங்கி இருக்கிறோம். இதன் மூலமாக கடந்த இரு மாதங்களாக கிடைக்கப் பெற்ற உதவிகள் மூலம் இத்தொழிலை நம்பி வாழ்பவர்களுக்கு உதவியிருக்கிறோம்.

கோவை மாநகரில் 45 நடன ஸ்டுடியோக்கள் இருக்கின்றன. இந்த ஸ்டூடியோக்கள் வாடகை கட்டிடத்தில் செயல்பட்டு வருவதால் இரண்டு மாதங்களுக்கு வாடகையில் விலக்கு அளிக்க மாவட்ட ஆட்சியர் நடவடிக்கை எடுக்க வேண்டும். இதே போல இந்தத் தொழிலை நம்பி மேக்கப் தொழில் செய்யும் 25 குடும்பங்கள் உள்ளன. அவர்களும் பாதிக்கப்பட்டுள்ளனர். கூடிய விரைவில் நடன நிகழ்ச்சிகள் நடத்த எங்களுக்கு அனுமதியளிக்க வேண்டும்” என்று கோரிக்கை வைத்தனர்.

அடுத்த செய்தி