ஆப்நகரம்

திமுக ஆட்சிக்கு வந்தால் என்ன ஆகும் தெரியுமா..? கோவையில் கொதித்தெழுந்த ஸ்டாலின்

குட்கா விவகாரத்தில் திமுக நிர்வாகிகளின் கைதை கண்டித்து, கோவை மாவட்டம் செஞ்சிலுவை சங்கம் முன்பு ஸ்டாலின் தலைமையில் திமுகவினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Samayam Tamil 4 May 2018, 1:41 pm
குட்கா விவகாரத்தில் திமுக நிர்வாகிகளின் கைதை கண்டித்து, கோவை மாவட்டம் செஞ்சிலுவை சங்கம் முன்பு ஸ்டாலின் தலைமையில் திமுகவினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
Samayam Tamil Dkn_Daily_News_May_2018__1997186541558
குட்கா விவகாரம்: கோவையில் ஸ்டாலின் கண்டன ஆர்பாட்டம்

கோவையில் ஸ்டாலின் ஆர்ப்பாட்டம்



அதில் பேசிய ஸ்டாலின், குட்கா விவகாரத்தில் சென்னை உயர்நீதிமன்றம் சிபிஐ விசாரணை நடத்த வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது. இதை திசை திருப்பும் நோக்கில் எம்.எல்.ஏ கார்த்திக் உட்பட 10 பேர் மீது காவல்துறை பொய் வழக்கின் கீழ் கைது செய்துள்ளதாக தெரிவித்தார்.

திமுக ஆர்ப்பாட்டத்திற்கு திரளான கூட்டம்



மேலும் பேசிய அவர், பொய் வழக்குகள் மூலம் திமுக-வை மிரட்ட முடியாது. நியாயத்தை மூடி மறைக்க வேண்டும் என எண்ணுபவர்களுக்கு பதிலடி கொடுக்கும் நோக்கில் தான் கோவையில் இன்று ஆர்பாட்டம் நடைபெறுவதாக ஸ்டாலின் கூறினார்.

கோவை திமுக ஆர்பபாடம்


கோவை மாவட்ட கண்காணிப்பாளராக இருக்கும் மூர்த்தி ஐபிஎஸ். அதிமுக அரசிற்கு பயந்து அவர்களுக்கு சாதமாக செயல்படுகிறார். திமுக-வினர் மீது வீண் பழை சுமத்தி பல வழக்குகளை அவர் பதிவு செய்துள்ளார். நாளை திமுக ஆட்சிக்கு வந்தால் இதற்கு அவர் பதில் சொல்லிய ஆக வேண்டும் என்று காட்டமாக பேசினார் ஸ்டாலின்

அடுத்த செய்தி