ஆப்நகரம்

கோவை: தமிழுக்காக programming போட்டி நடத்தும் அரசு கல்லூரி மாணவர்கள்

கோவை அரசு தொழில்நுட்பக் கல்லூரி, பன்னாட்டு அளவிலான கல்லூரி மாணவர்களுக்கிடையேயான தமிழ் தொழில்நுட்ப போட்டியை இணையவழியில் மார்ச் 5,6,7 ஆகிய தேதிகளில்(ONLINE) நடத்துகிறது

Samayam Tamil 12 Feb 2021, 10:33 pm
கோவை அரசினர் தொழில்நுட்பக் கல்லூரியின் தமிழ் மற்றும் நுண்கலை மன்றம் மற்றும் உலகத் தமிழ் தகவல் தொழில்நுட்ப மன்றம் மற்றும் இன்ஃபிட் (INFITT-INTERNATIONAL FORUM FOR INFORMATION TECHNOLOGY IN TAMIL) அமைப்பு இணைந்து நிரல்களம்'21 (HACKATHON FOR TAMIL) என்ற பெயரில் பன்னாட்டு அளவிலான கல்லூரி மாணவர்களுக்கிடையேயான தமிழ் தொழில்நுட்ப போட்டியை இணையவழியில் மார்ச் 5,6, 7 ஆகிய தேதிகளில்(ONLINE) நடத்துகிறது.
Samayam Tamil Tamil Hackathon


தமிழ் இலக்கியம் மற்றும் கலைகளை தற்கால தொழில்நுட்பங்கள் மூலம் மேம்படுத்துவது மற்றும் மாணவர்களிடம் இதுகுறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கில் இப்போட்டி நடத்தப்படுகிறது.

இதற்கான முன்பதிவு கீழேயுள்ள வலைத்தளத்தில் பிப்ரவரி 10 முதல் பிப்ரவரி 25 வரை நடைபெறும்.அணிக்கு 2 முதல் 4 நபர்கள் பங்கேற்கலாம்.பணியில் இருப்போர் பங்கேற்க விரும்பினால் அணிக்கு ஒருவர் மட்டும் இடம்பெறலாம்.

அதிமுகவின் முதல் எழுத்து அடிமையா? ஜோதிமணி காட்டம்

பங்கேற்க விரும்பும் அனைத்து கல்லூரி மாணவர்களும் கீழேயுள்ள வலைத்தளத்தில் பதிவு செய்ய விரும்புவோர் https://tmfa-gct.com என்ற வலைதளத்தைப் பயன்படுத்தலாம்.

பொதுவாக, நிரலாக்கப் போட்டிகள் என்றாலே அவை ஆங்கில நிறுவனங்களின் தேவையைப் பூர்த்தி செய்யும் கோரிக்கைகளுக்காக நிரல்களாகவே இருக்கும். இந்நிலையில் முழுக்க முழுக்க தமிழுக்காக நடத்தப்படும் ஹேக்கத்தான் போட்டி இது என்பது குறிப்பிடத்தக்கது.

அடுத்த செய்தி