ஆப்நகரம்

கோயம்புத்தூர்: போன் பேசும்போது, கவனக்குறைவால் மாடியிலிருந்து கீழே விழுந்தவர் பரிதாப பலி!!

கோயம்புத்தூரில் ஹோட்டல் ஊழியர் ஒருவர், போன் பேசியபடி மாடியிலிருந்து கீழே விழுந்து பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

Samayam Tamil 1 Sep 2018, 4:07 pm
கோயம்புத்தூரில் ஹோட்டல் ஊழியர் ஒருவர், போன் பேசியபடி மாடியிலிருந்து கீழே விழுந்து பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
Samayam Tamil போன் பேசியபடி, மாடியிலிருந்து கீழே விழுந்தவர் பரிதாப பலி!!
போன் பேசியபடி, மாடியிலிருந்து கீழே விழுந்தவர் பரிதாப பலி!!


கேரளாவின் பாலக்காடு பகுதியைச் சேர்ந்த சிவதாஸ் என்பவர், கோயம்புத்தூர் குனியமுத்தூரில் உள்ள ஹோட்டல் ஒன்றில் பணிபுரிந்து வந்துள்ளார்.

இந்நிலையில், கடந்த செப்டம்பர் 31 ஆம் தேதியன்று, சிவதாஸ் போன் பேசியபடியே, ஹோட்டலின் இரண்டாவது தளத்திலிருந்து தவறி விழுந்துள்ளார். இதைப் பார்த்து அதிர்ச்சியடைந்த அக்கம்பக்கத்தினர், உடனே அவரை மருத்துவமனைக்குச் சிகிச்சைக்காக அழைத்துச் சென்றுள்ளனர்.

இருப்பினும், சிவதாஸ் அதற்கு முன்பாகவே பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இதையடுத்து, இந்த சம்பவம் குறித்து போலீசார், வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

அடுத்த செய்தி