ஆப்நகரம்

கோடை மழையில் குளிர்ந்த கோவை: இன்னும் 2 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு!

அக்னி வெயில் கொளுத்தும் என எதிர்பார்த்த நிலையில் கோவை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் கடந்த சில தினங்களாகவே மழை பொழிந்து வருவதால் பொது மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Curated bySrini Vasan | Samayam Tamil 16 May 2022, 12:34 pm

ஹைலைட்ஸ்:

  • கோடை மழையில் குளிர்ந்த கோவை
  • சாலைகளில் நீர் வெள்ளம் போல் தேக்கம்
ஹைலைட்ஸ் படிக்க - டவுண்லோட் ஆப்
Samayam Tamil கோவையில் மழை
அக்னி வெயில் கொளுத்தும் என எதிர்பார்த்த நிலையில் கோவை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் கடந்த சில தினங்களாகவே வானம் மேகம் மூட்டத்துடனும் மாலை நேரங்களில் மழை பெய்தும் வருகிறது.
இந்த நிலையில் கோவை மாவட்டத்தில் நேற்று காலை மற்றும் மாலையில் மிதமான மழை பெய்ததால் குளிர்ச்சியான சூழ்நிலை ஏற்பட்டது. நேற்று நள்ளிரவில் பெய்த மழையால் கோவை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் மழை நீர் வெள்ளம் போல் ஓடியது.

அண்மைச் செய்திகளை உடனடியாக படிக்க கூகுள் நியூஸில் தமிழ் சமயம் இணையதளத்தை பின் தொடரவும்

கோவை போத்தனூர், உக்கடம்,ரயில்நிலையம், ஒப்பணக்கார வீதி, டவுன்ஹால்,காந்திரபுரம், இடையர்பாளையம், கணுவாய், பீளமேடு, கவுண்டம்பாளையம், நரசிம்மநாயக்கன்பாளையம், துடியலூர் வடவள்ளி உள்ளிட்ட மாநகரம் மற்றும் புறநகர் பல்வேறு பகுதிகளில் மழை பெய்தது. இந்த மழையினால் பொது மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். வெப்பத்தின் அளவு கோவை சுற்று புறத்தில் சற்று குறைந்து உள்ளது.

பொள்ளாச்சி மெயின் ரோடு குறிச்சி சாலையில் சாலை மிகவும் குண்டும் குழியுமாக உள்ளதால் இருசக்கர வாகனம் மற்றும் நான்கு சக்கர வாகனங்கள் செல்ல முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. மாவட்ட நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந்த பகுதி பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

முதல்வர் வைத்த முக்கிய கோரிக்கை: நிறைவேற்றும் பொள்ளாச்சி சேர்மன் சியாமளா நவநீதகிருஷ்ணன்!
இன்று முதல் 18ந் தேதி வரை கோவை மாவட்டத்தில் இடி, மின்னலுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளதால் அரசு வடிகால் வசதிகளை தயார்படுத்திட வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
எழுத்தாளர் பற்றி
Srini Vasan

அடுத்த செய்தி