ஆப்நகரம்

மலக்குழியில் விஷவாயு தாக்கியத்தில் கோயம்புத்தூர் இளைஞர் பலி

குடியிருப்பு பகுதிக்குள் மலக்குழியை சுத்தம் செய்ய முயன்ற துப்பரவு பணியாளர் விஷவாயு தாக்கி உயிரிழந்த சம்பவம் கோயம்புத்தூரில் நடந்துள்ளது.

Samayam Tamil 29 Jun 2018, 5:00 pm
குடியிருப்பு பகுதிக்குள் மலக்குழியை சுத்தம் செய்ய முயன்ற துப்பரவு பணியாளர் விஷவாயு தாக்கி உயிரிழந்த சம்பவம் கோயம்புத்தூரில் நடந்துள்ளது.
Samayam Tamil coimbatore-person-died
விஷவாயு தாக்கி கோவை இளைஞர் பலி


கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள காமராஜபுரத்தை சேர்ந்தவர் மகேந்திரன். இவர் கோவை மாநகராட்சியில் ஒப்பந்த அடிப்படையில் துப்பரவு பணிகளை செய்து வந்தார்.

காந்திரபுரம் மலையாள சமாஜ் எதிரே உள்ள குடியிருப்பில் மலக்குழியை சுத்தம் செய்வதற்காக அவர் சென்றுள்ளார். அங்கு குழியை திறந்து மகேந்திரன் உள்ளே இறங்கியதும் மயங்கி விழுந்து உயிரிழந்தார்.

இந்த சம்பவம் தொடர்பாக கோயம்புத்தூர் ரத்தினபுரி காவல்நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் மகேந்திரனின் உடலை உடற்கூறு ஆய்வுக்காக அனுப்பி வைத்தனர்.

மேலும் ரத்தினபுரி காவல்துறை, மலக்குழியின் விஷவாயு தாக்கி துப்புரவு பணியாளர் மகேந்திரன் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக வழக்கு பதிந்து விசாரணையை தொடங்கியுள்ளனர்.

தூய்மை இந்தியா திட்டத்திற்கு பல்வேறு பிரசாரங்கள் மேற்கொள்ளப்பட்டு செயல்பாடுகள் நடந்து வந்தாலும், மலம் அள்ளும் தொழிலாளர்க்கு வேறு வேலைவாய்ப்பை ஏற்படுத்தி தர திட்டம் எதுவும் இந்த அரசாங்கத்திடம் இல்லை.

தூய்மை இந்தியா திட்டத்தை மேம்படுத்தி வழிநடத்தி செல்லும் தற்போதைய அரசாங்கத்தின் ஆட்சியில் தான் மலம் அள்ளும் தொழிலாளர்களின் எண்ணிக்கை நான்கு மடங்காக உயர்ந்துள்ளது என கருத்துக்கணிப்பு தெரிவிக்கிறது.

மனிதனை மனிதன் இழி தொழில் செய்ய வைக்கும் இந்த நிலை எப்போதும் மாறும் என்பதே சமூக ஆர்வலர்களின் கேள்வியாக இருக்கிறது.

அடுத்த செய்தி