ஆப்நகரம்

வீட்டில் தூங்கிக்கொண்டிருந்தவர் சட்டைப் பையில் பணம் திருட்டு!

அமித்குமாரின் சட்டைபையில் இருந்த 11,000 ரூபாயை எடுக்க முயன்றுள்ளார்கள். சரியான நேரத்தில் விழித்துக்கொண்ட அமித் கூச்சல் போட்டு அக்கம்பக்கத்தினரை உதவிக்கு அழைத்தார்.

Samayam Tamil 29 May 2019, 11:40 pm
கோவையில் ரகசியமாக வீட்டில் நுழைத்து தூங்கிங்கொண்டிருந்தவரிடம் பணம் திருட முயன்ற இரண்டு பேர் கைது செய்யப்பட்டனர்.
Samayam Tamil prisoner-in-prison_e1a0b490-a3c8-11e8-9345-8d51f8ed9678


கோவை மதுக்கரை ஏசிசி பகுதியில் வசிப்பவர் அமித்குமார். ஏசிசி சிமெண்ட் கம்பெனியில் ஒப்பந்ததாரராக வேலை செய்கிறார். இவர் வேலை முடிந்து வீட்டில் தூங்கிக்கொண்டு இருக்கும்போது மர்ம நபர்கள் இருவர் வீட்டில் புகுந்துள்ளனர்.

அமித்குமாரின் சட்டைபையில் இருந்த 11,000 ரூபாயை எடுக்க முயன்றுள்ளார்கள். சரியான நேரத்தில் விழித்துக்கொண்ட அமித் கூச்சல் போட்டு அக்கம்பக்கத்தினரை உதவிக்கு அழைத்தார்.

பொதுமக்கள் ஒன்று சேர்ந்து திருட்டு ஆசாமிகளை பிடித்து மதுக்கரை காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். போலீசார் விசாரித்ததில் அவர்கள் அதே பகுதியை சேர்ந்தவர்கள் என்றும் அவர்களது பெயர் பென்னி மற்றும் கார்த்தி என்றும் தெரியவந்தது.

போலீசார் இருவர் மீதும் வழக்கு பதிவு நீதிமன்றத்தில் ஒப்படைத்தபின், கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.

அடுத்த செய்தி