ஆப்நகரம்

திருநங்கைகளுக்கு கைகொடுத்து உயர்த்திய கோவை மாநகர காவல் துறை!!

திருநங்கைகள் பொருளாதார ரீதியாக முன்னேற, கோவை மாநகரக் காவல்துறையினர் நலதிட்ட உதவிகளை செய்து வருகின்றனர்.

Samayam Tamil 26 Jul 2018, 4:53 pm
திருநங்கைகள் பொருளாதார ரீதியாக முன்னேற, கோவை மாநகரக் காவல்துறையினர் நலதிட்ட உதவிகளை செய்து வருகின்றனர்.
Samayam Tamil திருநங்கைகளுக்கு கைகொடுத்து உயர்த்திய கோவை மாநகர காவல் துறை!!
திருநங்கைகளுக்கு கைகொடுத்து உயர்த்திய கோவை மாநகர காவல் துறை!!


மூன்றாம் பாலினத்தவர் எனப்படும் திருநங்கைகள், சமூகத்தில் ஒடுக்கப்பட்டவர்களாகவே இருந்து வருகின்றனர். இதனாலேயே, இவர்களின் திறமைகள் மறைக்கப்பட்டு, வாய்ப்புகள் பறிக்கப்படுகின்றன.

இந்நிலையில், திருநங்கைகளை பொருளாதார ரீதியாக முன்னேற்ற, கோவை மாநகர காவல்துறை, தெற்கு ரோட்டரி கிளப்புடன் இணைந்து நலத்திட்ட உதவிகளை செய்துள்ளது. தனியார் ஹோட்டலின் நடத்தப்பட்ட அதற்கான நிகழ்ச்சியில், சுமார் 60 திருநங்கைகளுக்கு ரூ.3 லட்சம் மதிப்பில் தையல் இயந்திரங்கள், தள்ளு வண்டிகள் மற்றும் இட்லி பாத்திரங்களை வழங்கியுள்ளனர். இந்த நிகழ்ச்சியில் கோவை மாநகர காவல் ஆணையர் திரு. பெரியய்யா மற்றும் துணை ஆணையர்.லட்சுமி ஆகியோர் பங்கேற்றனர்.

முன்னதாக, கடந்த சில மாதங்களுக்கு முன், கோவை மாநகர காவல்துறையினர் 4 திருநங்கைகளுக்கு ஆட்டோ ரிக்ஷா வழங்கினர் என்பது குறிப்பிடத்தக்கது.

அடுத்த செய்தி