ஆப்நகரம்

கோவை: மீண்டும் காவல்துறை சார்பில் வீடியோ வெளியீடு

கோவை மாநகர காவல் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் மக்கள் நடமாட்டம் இல்லாத வீடியோவை கழுகு பார்வையில் கோவை மாநகர காவல்துறை பதிவு செய்து வெளியிட்டுள்ளது.

Samayam Tamil 13 Jul 2020, 3:21 pm
இரண்டாவது ஞாயிற்றுக் கிழமையாக தொடர்ந்து நடைபெற்ற ஊரடங்கு குறித்து கோவை மாநகர காவல்துறை சார்பில் வீடியோ வெளியிடப்பட்டுள்ளது.
Samayam Tamil கோவையில் ஊரடங்கு


தமிழகத்தில் கொரோனாவால் பாதிப்படைந்தவர்கள் எண்ணிக்கை ஒரு லட்சத்தை கடந்த நிலையில், ஜூலை மாதம் உள்ள அனைத்து ஞாயிற்று கிழமைகளிலும் மாநிலம் முழுவதும் முழு ஊரடங்கு அமல்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்தநிலையில், கடந்த 5 ஆம் தேதி ஞாயிற்று கிழமை முழு ஊரடங்கு கடைபிடிக்கப்பட்டது. இதை தொடர்ந்து நேற்று இரண்டாவது வாரமாக ஊரடங்கு கடைபிடிக்கப்பட்டது . இதனால் கோவை மாநகர காவல் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் மக்கள் நடமாட்டம் இன்றி வெறிச்சோடி காணப்பட்டது.



அதேபோல மாநகரின் அனைத்து பரபரப்பான முக்கிய சாலைகளும் வாகனங்கள் ஏதும் இயக்கப்படாமல் பொதுமக்கள் நடமாட்டம் இன்றி இருந்தது. இப்படி கோவை மாநகர காவல் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் மக்கள் நடமாட்டம் இல்லாத வீடியோவை கழுகு பார்வையில் கோவை மாநகர காவல்துறை பதிவு செய்து வெளியிட்டுள்ளது.

இதற்கு முன்பு விழிப்புணர்வு ஏற்படுத்தும் நோக்கில் திருப்பூர் மாவட்டக் காவல்துறை வெளியிட்ட சில வீடியோக்கள் வைரலானது குறிப்பிடத்தக்கது.

அடுத்த செய்தி