ஆப்நகரம்

கோவையில் தேசியக் கொடியை அவமதித்தவர் கைது

தேசியக் கொடியை அவமதித்த இளைஞரை கோவை போலீஸார் கைது செய்துள்ளனர்.தேசியக் கொடியை அவமதித்த இளைஞரை கோவை போலீஸார் கைது செய்துள்ளனர்.

Samayam Tamil 7 Apr 2018, 8:56 am
தேசியக் கொடியை அவமதித்த இளைஞரை கோவை போலீஸார் கைது செய்துள்ளனர்.தேசியக் கொடியை அவமதித்த இளைஞரை கோவை போலீஸார் கைது செய்துள்ளனர்.
Samayam Tamil index


கோவை மாவட்டம் பொள்ளாச்சியை அடுத்த காளியப்பகவுண்டன் புதூரைச் சேர்ந்தவர் வெற்றி. 25 வயதான இவர் விளம்பர பேனர் வடிவமைக்கும் பணி செய்துவருகிறார். தமிழ்நாடு திராவிடர் கழகத்திலும் உறுப்பினராக இருக்கிறார்.

காளியப்பகவுண்டன் புதூர் அரசுப் பள்ளியில் தொங்கவிடப்பட்டிருந்த தோரணக் கொடியை காலில் போட்டு மிதித்துள்ளார். அதைப் புகைப்படம் எடுத்து, சமூக வலைதளங்களிலும் வெளியிட்டுள்ளார்.

இதனை சமூக வலைதளங்களில் பார்த்த ஆனைமலையைச் சேர்ந்த ஆட்டோ ஓட்டுநர் கருணாகரன் போலீஸில் புகார் கூறியுள்ளார். ஆனைமலை போலீஸார் உடனடியாக வெற்றியை வெள்ளிக்கிழமை கைது செய்தனர். அவர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

அடுத்த செய்தி