ஆப்நகரம்

கோவையில் தற்கொலைக்கு முயன்ற எஸ்.ஐ.,!

கோவையில் எஸ்.ஐ., ஒருவர் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

TNN & Agencies 20 Oct 2017, 4:45 pm
கோவை: கோவையில் எஸ்.ஐ., ஒருவர் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Samayam Tamil coimbatore tamilnadu special police si sriknaths shocking video
கோவையில் தற்கொலைக்கு முயன்ற எஸ்.ஐ.,!


கோவைப்புதூரின் தமிழ்நாடு சிறப்புக் காவல்படையில், எஸ்.ஐ-யாக பணியாற்றியவர் ஶ்ரீகாந்த் (47). இவர், நேற்று திடீரென சாணிப் பவுடரைக் குடித்துத் தற்கொலைக்கு முயன்றுள்ளார். இதையடுத்து அவர் உடனடியாக இவர் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

அங்கு, அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. தற்போது அவர் நலமுடன் உள்ளார். இவர் தனது குடும்பப் பிரச்னை காரணமாக தற்கொலைக்கு முயன்றதாக தகவல் வெளியானது. ஆனால், அவர் தீபாவளி நாள் அன்று நள்ளிரவில் பேஸ்புக் பக்கத்தில் வெளியிட்டுள்ள வீடியோக்கள், பரபரப்பை ஏற்படுத்தியது.

தனது பேஸ்புக் பக்கத்தில், "நான், குடும்பச் சூழ்நிலையைக் கூறி கோவைக்கு பணி மாறுதல் வாங்கிவந்தேன். உயரதிகாரிகள் செய்த தவறுகளை போட்டோ எடுத்து மேலிடத்துக்கு அனுப்பினேன். அவர்கள்மீது நடவடிக்கை எடுக்காமல், என்னை வேலூருக்கு பணியிட மாற்றம் செய்தனர்.

உயரதிகாரிகள் செய்யும் தவறுக்குத் துணைப்போக முடியுமா? தமிழ்நாடு காவல்துறையைக் காப்பாற்றுங்கள். நான் தற்கொலை செய்து கொள்ளப் போகிறேன்" என பதிவிட்டுள்ளார்.

coimbatore tamilnadu special police si sriknaths shocking video

அடுத்த செய்தி