ஆப்நகரம்

Coimbatore: 4 நாட்கள் மூடப்பட்டது கோவை டி.கே மார்க்கெட்

கூடுதலாக மார்க்கெட் வியாபாரிகள் 500 பேருக்கு பரிசோதனை நடத்தவும் திட்டமிட்டுள்ளது என வியாபாரிகள் சங்கத்தினர் தெரிவித்தனர்.

Samayam Tamil 18 Jul 2020, 7:25 pm
கோவை தியாகி குமரன் மார்க்கெட்டில் காய்கறி வியாபாரம் செய்யும் 70 வயது முதியவருக்கு இதயநோய் இருந்து வந்தது. இதையடுத்து கோவையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அவர் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் நேற்று பலியானார்.
Samayam Tamil TK Market


இறந்த முதியவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு இருக்கலாம் என்ற சந்தேகத்தின் பேரில் அவரது உடல் கோவை அரசு மருத்துவமனைக்கு பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது. பரிசோதனையில் அவருக்கு நோய் இருப்பது உறுதிசெய்யப்பட்டது. இதைத்தொடர்ந்து தியாகி குமரன் மார்க்கெட்டில் கிருமிநாசினி தெளிக்க மாநகராட்சி அதிகாரிகள் முடிவு செய்தனர்.

இப்பணிக்காக நான்கு நாட்களுக்கு மார்க்கெட் தற்காலிகமாக மூடல் என்பது, பொதுமக்களின் நலனை கருத்தில் கொண்டு எடுக்கப்பட்டுள்ளது என்று மாநகராட்சி நிர்வாகம் தெரிவித்துள்ளது.

மாநகராட்சி அதிகாரிகள் கூறும் நடவடிக்கைகளை பின்பற்றப்படும் எனவும் மார்க்கெட்டில் தொடர்ந்து கிருமிநாசினி மருந்து அளிக்கும் பணியில் மாநகராட்சி ஊழியர்கள் ஈடுபட்டனர். மார்க்கெட் வியாபாரிகள் 500 பேருக்கு பரிசோதனை நடத்தவும் திட்டமிட்டுள்ளது என வியாபாரிகள் சங்கத்தினர் தெரிவித்தனர்.

அடுத்த செய்தி