ஆப்நகரம்

கோவை டு சென்னை: வேதா இல்ல நினைவிடத்துக்கு தீபம் ஏந்தி சைக்கிள் பேரணி

கோவை மாவட்டத்திலிருந்து சென்னையில் உள்ள ஜெயலலிதா நினைவிடம் திறப்பு விழாவிற்கு தீபச் சுடர் ஏந்தி சைக்கிள் பேரணியாக 8 பேர் கிளம்பியுள்ளனர்.

Samayam Tamil 25 Jan 2021, 8:50 am
கோவை மாவட்டம் அவிநாசியில் இருந்து சென்னை மெரினா கடற்கரையில் அமைக்கப்பட்டுள்ள முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் நினைவிடத்தை வரும் 27ஆம் தேதி தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் திறந்து வைக்க உள்ளார். இதில் அமைச்சர்கள் சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் அதிமுக பொறுப்பாளர்களும் பெருந்திரளாக கலந்து கொள்கின்றனர்.
Samayam Tamil Cycle Rally


வெகு விமரிசையாக நடைபெறும் நிகழ்ச்சிக்கு கோவை மாவட்டம்அதிமுகவின் சார்பு அணி செயலாளர் வழக்கறிஞர் விஜய் ஆனந்த் தலைமையில் எட்டு பேர் அவிநாசியில் இருந்து சென்னை நோக்கி கடந்த மூன்று நாட்களாக சைக்கிள் பயணம் செய்து வருகின்றனர். இதையடுத்து அவர்கள் இன்று சேலம் வழியாக ஆத்தூர் நகர பகுதிக்குள் தீபச் சுடர் ஏந்தி சைக்கிள் பேரணியாக சென்றனர்.

“ஐ லவ் கோவை” பிரசாரத்தில் செல்ஃபி எடுத்துக்கொண்ட முதல்வர்

அப்போது அவர்கள் செய்தியாளர்களிடம் கூறும்போது தமிழகத்தின் முன்னாள் முதல்வரும் அதிமுக பொதுச் செயலாளருமான ஜெயலலிதாவின் நினைவிடம் திறப்பு விழாவில் கலந்துகொள்ளவும் மீண்டும் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் தமிழக முதல்வராக வேண்டும் என்றும் நாங்கள் கோவை மாவட்டம் அவிநாசியில் இருந்து சைக்கிள் பேரணியாக சென்று அம்மாவின் நினைவிடத்தில் இந்த தீபச்சுடரை தமிழக முதல்வரிடமும் துணைமுதல்வர் இடமும் வழங்க உள்ளதாகவும் தெரிவித்தனர்.

அதைத் தொடர்ந்து அவர்கள் தங்களது சைக்கிள் பயணத்தை சென்னை நோக்கி புறப்பட்டு சென்றனர்.

அடுத்த செய்தி