கோவை மாவட்டம் ஆனைக்கட்டி சாலையில் உள்ள ராஜ் சேம்பர் குடியிருப்பில் வசித்து வருபவர் கிருஷ்ணகுமார். இவரது நண்பர்கள் சுரேஷ், ஜெயக்குமார், வெள்ளியங்கிரி. நேற்று இரவு கிருஷ்ணக்குமார், சுரேஷ், ஜெயக்குமார் ஆகியோர் கிருஷ்ணகுமார் குடியிருப்புக்குச் சென்றுள்ளனர். அப்போது வெள்ளியங்கிரி பரோட்டோ சாப்பிட்டு கொண்டிருந்துள்ளார்.
அப்போது குடிபோதையில் இருந்த ஜெயக்குமார் புரோட்டாவை எடுக்க முயன்றபோது வெள்ளியங்கிரி கையை எடு என்று கூறியுள்ளார். இதனால் இருவருக்கும் இடையே வாக்குவாதம் நிகழ்ந்துள்ளது. இதில் வெள்ளியங்கிரி ஜெயக்குமாரின் மனைவியை தறக்குறைவாக பேசியதாக கூறப்படுகிறது.
இதனால் ஆத்திரமடைந்த ஜெயக்குமார் கீழே கிடந்த செங்கல்லை எடுத்து வெள்ளியங்கிரியை தாக்கியுள்ளார். இதில் ஆத்திரமடைந்த வெள்ளியங்கிரி ஒரு மரக்கட்டையால் ஜெயக்குமாரின் பின்னந்தலையிலும் முகத்தில் சரமாரியாக தாக்கியுள்ளார். இதில் ஜெயக்குமார் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
ரசிகர்கள் ரொம்ப எதிர்பார்த்த 'குட் நியூஸ்' சொன்ன வனிதா
இச்சம்பவம் குறித்து ஜெயக்குமாரின் தாயார் அளித்த புகாரின் பேரில் தடாகம் காவல்துறையினர் வெள்ளியங்கிரியை கைது செய்து கொலை வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.