ஆப்நகரம்

அரசு பள்ளிகளுக்கு ஜாக்பாட்; மாணவ மாணவிகள் ஹேப்பி!

அரசு பள்ளிகளுக்கு அடித்திருக்கும் ஜாக்பாட் மாணவ மாணவிகளை மகிழ்ச்சியில் துள்ளி குதிக்க செய்துள்ளது.

Samayam Tamil 30 Jun 2022, 2:17 pm
கோவையில் “நான் முதல்வன்” திட்டத்தின் கீழ் கல்லூரி கனவு நிகழ்ச்சி கோவை பாரதியார் பல்கலைகழகத்தில் நடைபெற்றுது. இதில் 113 அரசு பள்ளி மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.
Samayam Tamil அரசு பள்ளிகள் தத்தெடுப்பு
அரசு பள்ளிகள் தத்தெடுப்பு


இந்த நிகழ்ச்சியில் மாணவர்களுக்கான மேல்நிலை படிப்பு மற்றும் திறன் மேம்பாடு பயிற்சிகள் அளிக்கப்பட்டது. முன்னதாக கோவையில் உள்ள 150 அரசு பள்ளிகளை, பாரதியார் பல்கலைகழகம், அண்ணா பல்கலைகழகத்தின் கீழ் இயங்கும் 40 க்கும் மேற்பட்ட கல்லூரிகள் தத்தெடுத்துள்ளது.

அதற்காக கல்லூரிகளுடன் அரசு பள்ளிகளுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் போடப்பட்டது. தமிழகத்திலேயே முதல் முறையாக 150 அரசு பள்ளிகளை, கல்லூரிகள் தத்தெடுத்து 2 ஆண்டுகளுக்கு பல்வேறு பயிற்சிகளை அளிக்க உள்ளனர்.


இந்த பயிற்சியின்போது கல்லூரியில் உள்ள படிப்புகள், கட்டமைப்புகள் குறித்தும், சிறப்பு திறன் மேம்பாடு பயிற்சிகளை அளிக்க உள்ளனர். மேலும் கணினி வகுப்புகள், பயிற்சி போட்டிகள் வைத்து சான்றிதழ்கள் வழங்க உள்ளனர்.

அதிமுகவில் இருந்து எடப்பாடி நீக்கம்; தலைமைக்கழகம் பெயரில் போஸ்டர்!

முதல் கட்டமாக 40 கல்லூரிகள் தலா 5 முதல் 6 அரசு பள்ளிகளை தத்தெடுத்துள்ளனர். வரும் நாட்களில் 100 கல்லூரிகள் மாவட்டம் முழுவதும் உள்ள அரசு பள்ளிகளை தத்தெடுத்து பல்வேறு பயிற்சியளிக்க உள்ளனர்.

கல்லூரி கனவு நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் சமீரன் பேசும்போது, ‘முதல்வர் கனவு திட்டமான நான் முதல்வன் திட்டத்தின் கீழ் அறிமுகப்பட்டுள்ள இந்த நடைமுறைகள் பள்ளி மாணவர்களின் எதிர்காலத்திற்கு உகந்த திட்டம். கோவையில் பல்வேறு கல்லூரிகள் அரசு பள்ளிகளை தத்தெடுக்க முன்வருகின்றன.

ஒரே நாள்.. ஓங்கி அடித்த கொரோனா; அச்சத்தில் உறைந்து கிடக்கும் மக்கள்!

அந்தவகையில் 10 நாட்களில் 40 கல்லூரிகள் 150 அரசு பள்ளிகளை தத்தெடுத்துள்ளனர். இதில் சிறப்பாக செயல்படும் கல்லூரிகளுக்கு விருதுகள் வழங்கப்படும். மிகச்சிறப்பாக செயலாற்றும் கல்லூரி நிர்வாகத்தினரை தமிழக முதல்வரே நேரில் சந்தித்து பாராட்ட ஏற்பாடு செய்துள்ளோம்’ என தெரிவித்தார்.

இதையடுத்து மாவட்ட ஆட்சியரிடம் மாணவர்கள் கலந்துரையாடலில் ஈடுபட்டனர். அப்போது நீட் மற்றும் யு.பி.எஸ்.சி தேர்வுகளுக்கு தயாராவது. பாடத்திட்டம் மற்றும் பல்வேறு கருத்துகளை மாணவர்கள் பகிர்ந்து கொண்டனர்.

அடுத்த செய்தி