கோவை அரசு கல்லூரியில் உள்ள சிகிச்சை மையம் தொடர்ந்து செயல்படும் என்றும், அதை மூட வாய்ப்பில்லை என்றும் கல்லூரி திறந்த பின்பும் வளாகத்தில் சிகிச்சை மையம் தொடர்ந்து செயல்படும் என டீன் நிர்மலா தகவல் தெரிவித்தார்.
கோவை மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு கடந்த மே மாதத்தில் அதிகரித்திருந்தது. தொற்று ஏற்பட்ட 70 சதவீதம் பேருக்கு ஆக்சிஜன் தேவைப்பட்டது. இதனால் மாவட்டத்தில் ஆக்சிஜன் படுக்கைக்குத் தட்டுப்பாடு நிலவியது. இதையடுத்து மாவட்ட நிர்வாகம் சார்பில் கோவை அரசு கலைக் கல்லூரி ஆக்சிஜன் வசதியுடன் கூடிய நூறு படுக்கைகள் கொண்ட கொரோனா சிறப்பு மையம் கடந்த மே மாதம் ஏற்படுத்தப்பட்டது.
இதனை, திமுக மாநில இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் எம்எல்ஏ திறந்து வைத்தார். இந்த சிகிச்சை மையத்தில் ஆக்சிஜன் அளவு 88 முதல் 90 சதவிகிதம் இருக்கும் நபர்கள் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. சுழற்சி முறையில் மருத்துவர்கள், செவிலியர்கள் பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.
இந்த சூழலில் கொரோனாவின் தாக்கம் கோவை மாவட்டத்தில் படிப்படியாகக் குறைந்து வருகிறது. அதேவேளை மூன்றாம் அலைக்கு வாய்ப்பிருப்பதாக வல்லுநர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். அதற்கான ஆயத்த பணியில் சுகாதாரத்துறை ஈடுபட்டு வருகிறது.
இந்த சூழலில் அரசு கலைக் கல்லூரியில் ஏற்படுத்தப்பட்டுள்ள சிகிச்சை மையம் குறித்து கோவை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் டீன் நிர்மலா கூறுகையில், “அரசு கல்லூரியில் உள்ள சிகிச்சை மையம் தொடர்ந்து செயல்படும். மூட வாய்ப்பில்லை. கல்லூரி திறந்தாலும் அதன் வளாகத்தில் சிகிச்சை மையம் செயல்படும்.
அதற்கு ஏற்றார்போல மாற்றங்கள் செய்யப்படும். சிகிச்சை மையத்தை உடனடியாக அங்கிருந்து மாற்றிய பின் மீண்டும் பரவல் அதிகரித்தால் திரும்பவும் சிகிச்சை மையத்தை ஏற்படுத்துவதற்குக் காலதாமதம் உள்ளிட்ட பிரச்சினைகள் ஏற்படும். எனவே, பொதுமக்கள் நலன் கருதி அரசு கலைக் கல்லூரியில் உள்ள மையம் தொடர்ந்து செயல்படும்” என்றார்.
கோவை மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு கடந்த மே மாதத்தில் அதிகரித்திருந்தது. தொற்று ஏற்பட்ட 70 சதவீதம் பேருக்கு ஆக்சிஜன் தேவைப்பட்டது. இதனால் மாவட்டத்தில் ஆக்சிஜன் படுக்கைக்குத் தட்டுப்பாடு நிலவியது. இதையடுத்து மாவட்ட நிர்வாகம் சார்பில் கோவை அரசு கலைக் கல்லூரி ஆக்சிஜன் வசதியுடன் கூடிய நூறு படுக்கைகள் கொண்ட கொரோனா சிறப்பு மையம் கடந்த மே மாதம் ஏற்படுத்தப்பட்டது.
இதனை, திமுக மாநில இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் எம்எல்ஏ திறந்து வைத்தார். இந்த சிகிச்சை மையத்தில் ஆக்சிஜன் அளவு 88 முதல் 90 சதவிகிதம் இருக்கும் நபர்கள் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. சுழற்சி முறையில் மருத்துவர்கள், செவிலியர்கள் பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.
இந்த சூழலில் கொரோனாவின் தாக்கம் கோவை மாவட்டத்தில் படிப்படியாகக் குறைந்து வருகிறது. அதேவேளை மூன்றாம் அலைக்கு வாய்ப்பிருப்பதாக வல்லுநர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். அதற்கான ஆயத்த பணியில் சுகாதாரத்துறை ஈடுபட்டு வருகிறது.
இந்த சூழலில் அரசு கலைக் கல்லூரியில் ஏற்படுத்தப்பட்டுள்ள சிகிச்சை மையம் குறித்து கோவை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் டீன் நிர்மலா கூறுகையில், “அரசு கல்லூரியில் உள்ள சிகிச்சை மையம் தொடர்ந்து செயல்படும். மூட வாய்ப்பில்லை. கல்லூரி திறந்தாலும் அதன் வளாகத்தில் சிகிச்சை மையம் செயல்படும்.
அதற்கு ஏற்றார்போல மாற்றங்கள் செய்யப்படும். சிகிச்சை மையத்தை உடனடியாக அங்கிருந்து மாற்றிய பின் மீண்டும் பரவல் அதிகரித்தால் திரும்பவும் சிகிச்சை மையத்தை ஏற்படுத்துவதற்குக் காலதாமதம் உள்ளிட்ட பிரச்சினைகள் ஏற்படும். எனவே, பொதுமக்கள் நலன் கருதி அரசு கலைக் கல்லூரியில் உள்ள மையம் தொடர்ந்து செயல்படும்” என்றார்.