ஆப்நகரம்

அடப்பாவிகளா...டிரான்ஸ்ஃபார்மரை கூட விட்டுவைக்கலையா?

சூலூர் அருகே அரசூர் பகுதியிலிருந்து பெத்தாம்பாளையம் செல்லும் பாதையில் உள்ள டிரான்ஸ்பார்மரை கீழே தள்ளிவிட்டு அதிலிருந்த காப்பர் வயர்களை மர்ம நபர்கள் திருடிச் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Samayam Tamil 21 Nov 2020, 10:52 am
அரசூர் பகுதியிலிருந்து பெத்தாம்பாளையம் செல்லும் பாதையில் ஒரு இன்ஜினியரிங் தொழிற்சாலை உள்ளது. இந்த தொழிற்சாலைக்கு தனியாக மின் பாதை அமைக்கப்பட்டு மின்சாரம் சென்று கொண்டிருந்தது.
Samayam Tamil டிரான்ஸ்ஃபார்மர்


தொழிற்சாலை கடந்த ஆறு மாதங்களாக செயல்படவில்லை. தொழிற்சாலை அருகே மின்மாற்றி எனப்படும் டிரான்ஸ்பார்மர் பொருத்தப்பட்டு இருந்தது. ஆள் நடமாட்டம் இல்லாத பகுதியில் இந்த ட்ரான்ஸ்ஃபார்மர் அமைந்திருந்தது.

இந்த நிலையில் இரவு மர்ம நபர்கள் அந்த ட்ரான்ஸ்ஃபார்மருக்கு செல்லும் மின் இணைப்பை துண்டித்துவிட்டு, அதனை கீழே தள்ளி அதிலிருந்த காப்பர் வயர்களை திருடி சென்றுள்ளனர். இதை அந்த வழியாக சென்ற பொதுமக்கள் பார்த்து அரசூர் மின்சார வாரியத்திற்கு தகவல் அளித்துள்ளனர்.

வருங்கால டாக்டர், தூக்கில் தொங்கிய அவலம்... பெரும் அதிர்ச்சி!

இதுதொடர்பாக அரசூர் மின்வாரிய இளநிலை பொறியாளர் சுரேஷ்குமார் சூலூர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். சூலூர் போலீசார் இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

உயர் அழுத்த மின்சாரம் செல்லும் மின் பாதையில் உள்ள டிரான்ஸ்ஃபார்மரிலேயே காப்பர் ஒயர் திருடப்பட்டுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அடுத்த செய்தி