ஆப்நகரம்

அரசு அலட்சியத்தால் பெரும் ஆபத்தில் சிக்கி நிற்கும் கோவை!

கோவை புட்டுவிக்கி குளக்கரையில் மர்ம நபர்கள் சிலர் மருத்துவக் கழிவுகளைக் கொட்டி சென்றதால் நோய்த் தொற்று பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

Samayam Tamil 14 Sep 2021, 11:42 pm
கோவை மாவட்டத்தில் கொரோனா கழிவுகளால் தொற்று மிகத் தீவிரமாகப் பரவ வாய்ப்பு உருவாக்கப்பட்டுள்ள நிலையில் அரசு அதிகாரிகள் அதுகுறித்து கண்டு கொள்ளாமல் உள்ளனர். கோவையில் மாஸ்க் உள்ளிட்ட விதிமுறைகளுக்குத் தேடித் தேடி அபராதம் விதிக்கும் அதிகாரிகள் இந்த விவகாரத்தில் மிகவும் அலட்சியமாகவே இருந்து வருகின்றனர்.
Samayam Tamil அரசு அலட்சியத்தால் பெரும் ஆபத்தில் சிக்கி நிற்கும் கோவை!


கோவையில் உள்ள குளக்கரைகளில் கட்டிட இடிபாடுகளைக் கொட்டுவதும் மருத்துவக் கழிவுகளைக் கொட்டுவதும் தொடர்ந்து அரங்கேறி வருகிறது. இரண்டு மாதங்களுக்கு முன்பு உக்கடம் பெரியகுளம் பகுதியில் மருத்துவக் கழிவுகள் கொட்டப்பட்டிருந்தன.

இதுகுறித்த புகாரின் பேரில் மாநகராட்சி ஊழியர்கள் அங்குச் சென்று மருத்துவ கழிவுகளை அகற்றினர். இந்த நிலையில் செல்வபுரத்தை அடுத்து அமைந்துள்ள புட்டுவிக்கி குளக்கரையில் மர்ம நபர்கள் சிலர் மருத்துவக் கழிவுகளைக் கொட்டிச் சென்றுள்ளனர்.

எஸ் பி.வேலுமணிக்கு நெருக்கமான நிறுவனங்கள் கருப்பு பட்டியலில்?
பயன்படுத்தப்பட்ட சிரஞ்சுகள், மருந்து பாட்டில்கள் உள்ளிட்ட பொருட்கள் குளக்கரை அருகே கொட்டப்பட்டுள்ளது. இதனால் நோய்த் தொற்று பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

இதை உடனடியாக சுத்தப்படுத்துவதோடு, இத்தகைய செயல்களில் ஈடுபடுவோர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.

அதேவேளைக் கோவையில் மக்களுக்கு பல்வேறு உத்தரவுகளைப் போட்டுப் பாதிப்பைக் கட்டுப்படுத்துவதாக அரசு அதிகாரிகள் கூறி வருகின்றனர். இவர்கள் ஏன் இதுபோன்ற சுகாதார சீர்கேடு போன்ற விவகாரங்களைப் புகார் வராமல் கண்டு கொள்வதில்லை என்ற கேள்வி எழுந்துள்ளது.

அடுத்த செய்தி