ஆப்நகரம்

கொரோனாவிலும் உதவி, 16 பேருக்கு உயிர் கொடுத்த தன்னார்வலர்கள்!

கொரோனா தொற்றுக்கு ஆளாகிக் குணமடைந்தபின் 15 பேர் செய்த உதவி தீவிர சிகிச்சைப் பிரிவிலிருந்த 16 பேரை மீட்டுள்ளது...

Samayam Tamil 10 Sep 2020, 10:15 pm
கொரோனா தொற்று காரணமாகக் கோவையில் தினமும் நூற்றுக்கணக்கானோர் பாதிப்படைந்து வருகின்றனர். அதில் குறிப்பிட்ட சதவீதம் பேர் உடலில் நோயின் தீவிரம் அதிகமாகக் காணப்படுகிறது. இதன் காரணமாக உயிரிழப்புகளும் ஏற்படுகிறது.
Samayam Tamil கொரோனாவிலும் உதவி, 16 பேருக்கு உயிர் கொடுத்த தன்னார்வலர்கள்!
கொரோனாவிலும் உதவி, 16 பேருக்கு உயிர் கொடுத்த தன்னார்வலர்கள்!


இதற்கிடையே நோயிலிருந்து குணமடைபவர்கள் தங்கள் எதிர்ப்புச் சக்தியை பிளாஸ்மா தானமாகக் கொடுத்து, கோவை மாவட்ட மருத்துவமனைகளில் தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வந்த 16 கொரோனா நோயாளிகளைக் காப்பாற்றியுள்ளனர்.

குணமடைந்த தன்னார்வல கொடையாளர்களிடம் பெறப்பட்ட பிளாஸ்மாக்கள் தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வந்தவர்களுக்குச் செலுத்தப்பட்டது. மருத்து செலுத்தப்பட்டபோதிருந்தே சம்பந்தப்பட்டவர்களின் உடலில், நல்ல எதிர்ப்புச் சக்தி உருவானது.

ரூ. 80 ஆயிரம் பணத்திற்காக குழந்தை பிறந்தவுடன் விற்பனை, பொள்ளாச்சியில் அதிர்ச்சி!

சிலர் 2 நாட்களிலே நல்ல குணமுடன் காணப்பட்டுள்ளனர். இதன் காரணமாக பிளாஸ்மா தானம் குறித்த விழிப்புணர்வைத் தீவிரப்படுத்தலாமா எனச் சுகாதார அதிகாரிகள் ஆலோசனை நடத்தி வருகின்றனர். இது தவிரச் சிலர் கொரோனாவிலிருந்து குணமடைந்தவுடன், தாமாக முன் வந்து பிளாஸ்மா தானம் அளித்து வருகின்றனர்.

நாட்டில் கொரோனாவை வீழ்த்த சிரமப்படும் மக்களுக்குத் துணையாக மருந்துகள் இல்லை. பதிலாக இந்த பிளாஸ்மா முறை மட்டுமே சற்று நம்பிக்கை அளிக்கும் சிகிச்சை முறையாக ஆங்கில மருத்துவ முறையில் உள்ளது. இதிலும் நோயாளிகள் நூறு சதவீதம் குணமடைவார்கள் எனக் கூறிவிட முடியாது. அதேபோல் அரசு அனுமதி அளித்துள்ள மருத்துவமனைகளைத் தவிர்த்து வேறு இடங்களில் இந்த பிளாஸ்மா சிகிச்சை முறை மேற்கொள்ளப்படாது.

அடுத்த செய்தி