ஆப்நகரம்

பள்ளி மாணவர்களின் பெற்றோர்களைக் கண்டறிந்து கோவையில் செம கவனிப்பு!

செப்டம்பர் 1 முதல் பள்ளி கல்லூரிகள் திறக்கப்படவுள்ள நிலையில் அதற்கான பணிகள் தீவிரமெடுத்துள்ளன.

Samayam Tamil 30 Aug 2021, 11:42 pm
கோவை மாவட்டத்தில் உள்ள பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் கிருமி நாசினிகள் கொண்டு தூய்மைப்படுத்தும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.
Samayam Tamil பள்ளி மாணவர்களின் பெற்றோர்களைக் கண்டறிந்து கோவையில் செம கவனிப்பு!


கொரோனா ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ள நிலையில், மாணவர்கள் படிப்பைக் கருத்தில் வரும் செப்டம்பர் 1 ஆம் தேதி முதல் பள்ளி கல்லூரிகள் திறக்க தமிழ்நாடு அரசு அனுமதி வழங்கியது. இதையடுத்து கோவையில் உள்ள பள்ளி, கல்லூரிகளில் கிருமி நாசினிகள் கொண்டு தூய்மை செய்யும் பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது.

இதற்கிடையே கோவை அரசு கலைக் கல்லூரியில் அமைக்கப்பட்ட கொரோனா சிகிச்சை மையம் வேறு பகுதிக்கு மாற்றப்பட்டுள்ளது.

கோவையில் வீட்டைத் திறந்து வைத்துத் தூங்கினால் உங்கள் கதை க்ளோஸ்...
மேலும் பள்ளி கல்லூரி மாணவர்களுக்கு கடைப்பிடிக்க வேண்டிய கொரோனா வழிமுறைகள் வாட்ஸ் மூலம் அனுப்பப்படுகிறது.

அதே போல் கடந்த 3 நாட்களாகப் பள்ளி மாணவர்களின் பெற்றோர்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணிகளும் நடைபெற்று வருகிறது.

அடுத்த செய்தி