ஆப்நகரம்

கோவையில் பயிற்சி மருத்துவர்கள் இருவருக்கு கொரோனா உறுதி

கோவை இ.எஸ்.ஐ., மருத்துவமனையில் கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்து வந்த கோவை அரசு மருத்துவமனையை சேர்ந்த இரண்டு பயிற்சி மருத்துவர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது

Samayam Tamil 13 Apr 2020, 5:53 pm
கோவை: கொரோனா இடர்பாடுகளில் பணியாற்றி வரும் பயிற்சி மருத்துவர்கள் இருவருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
Samayam Tamil கோப்புப்படம்
கோப்புப்படம்


கொரோனா வைரஸின் வீரியம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்த பாதிப்பில் பொதுமக்கள் மட்டுமின்றி பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை தரும் மருத்துவர்களும் தொற்றுக்கு உள்ளாகி வருகின்றனர்.

இந்த நிலையில் கோவை இ.எஸ்.ஐ., மருத்துவமனையில் கோவை அரசு மருத்துவமனையை சேர்ந்த இரண்டு பயிற்சி மருத்துவர்கள் கொரோனோ தொற்றுள்ள நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்து வந்தனர். இந்த குழுவில் இரண்டு இளம் மருத்துவர்களுக்கு இன்று கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

கொரோனா பரிசோதனை: இஸ்லாமிய கூட்டமைப்புகளோடு கைகோர்த்த மாவட்ட நிர்வாகம்

மேலும் இவர்கள் ஏப்ரல் 2 முதல் 6ஆம் தேதி வரை கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்து வந்துள்ளனர். பின்னர் சிகிச்சை முடிந்த பின்பு விடுதிக்குச் சென்றுள்ளனர். இந்த நிலையில் இன்று அறிகுறிகள் தென்பட்டதால் நடைபெற்ற பரிசோதனையில் இவர்களுக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதையடுத்து, இரு மருத்துவர்களும் தற்போது இ.எஸ்.ஐ., மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர். இவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அதேசமயம், இவர்களுடன் தொடர்பில் இருந்தவர்களை கண்கானிக்கும் பணியும் முடுக்கி விடப்பட்டுள்ளது.

அடுத்த செய்தி