ஆப்நகரம்

வேறு சாதி வாலிபரை திருமணம் செய்ததால் தற்கொலை செய்த பெண்ணின் குடும்பம் !

வேறு சாதியை சேர்ந்தவரை தனது மகள் திருமணம் செய்ததால், அந்த பெண்ணின் பெற்றோர் தற்கொலை செய்த துயர சம்பவம் பொள்ளாச்சியில் நடைபெற்றுள்ளது.

Samayam Tamil 15 Oct 2018, 12:56 pm
வேறு சாதியை சேர்ந்தவரை தனது மகள் திருமணம் செய்ததால், அந்த பெண்ணின் பெற்றோர் தற்கொலை செய்த துயர சம்பவம் பொள்ளாச்சியில் நடைபெற்றுள்ளது.
Samayam Tamil 7853_suicide-poison


பொள்ளாச்சியில் உள்ள நல்லூர் என்ற கிராமத்தை சேர்ந்தவர் அகதூர் சாமி ( 63 வயது ) . விவசாயத்தை பிரதான தொழிலாக செய்துவரும் இவருக்கு, ஸ்வர்ன லாதா ( வயது 53 )என்ற மனைவியும், 25 வயதான சினேகா என்ற மகளும் உள்ளனர்.

இவர்களது மகள் சினேகா வேற்று சமூகத்தை சேர்ந்த வாலிபரை காதலித்து வந்துள்ளார். அவருடன் இருக்கும் காதலை முரித்துகொள்ள வேண்டும் என்று சினேகாவிடம் அவரது தாய் பலமுறை தெரிவித்துள்ளார்.

ஆனால் சினேகா அந்த நபரை திருமணம் செய்துள்ளார். இதை தாங்கிக்கொள்ள இயலாத அவரது பெற்றோர் பூச்சி மருந்து குடித்து தற்கொலைக்கு முயன்றனர்.

தந்தை அகதூர் சாமி சம்பவ இடத்திலேயே இறந்துவிட்டார்.உயிருக்கு போராடிய ஸ்வர்ன லாதாவை அவரது உறவினர்கள் அருகில் இருக்கும் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.ஆனால் அவர் சிகிச்சை அளித்தும் , மரணமடைந்தார்.

இந்த சம்பவம் தொடர்பாக பொள்ளாச்சி மேற்கு காவல்நிலைத்தை சேர்ந்த காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

அடுத்த செய்தி