ஆப்நகரம்

பொள்ளாச்சி பாலியல் வழக்கில் கைதான மூவருக்கு ஆண்மை பரிசோதனை!

பொள்ளாச்சி பாலியல் வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள மூன்று பேருக்கும் ஆண்மை பரிசோதனை நடத்த சிபிஐக்கு அனுமதி அளித்து மகளிர் நீதிமன்றம் உத்தரவிடட்டுள்ளது.

Samayam Tamil 21 Jan 2021, 11:42 pm
நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய பொள்ளாச்சி பாலியல் வழக்கில் சபரிநாதன், திருநாவுக்கரசு வசந்தகுமார் உள்ளிட்ட ஐந்து பேர் கைது ஏற்கெனவே கைது செய்யப்பட்டு சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
Samayam Tamil கோப்பு படம்
பொள்ளாச்சி பாலியல் வழக்கில் கைதான மூவருக்கு ஆண்மை பரிசோதனை செய்த நீதிமன்றம் அனுமதி


இந்த வழக்கை தற்போது சிபிஐ விசாரித்து வரும் நிலையில், அதிமுக பிரமுகர் முருகானந்தம், பாபு உள்ளிட்ட மேலும் மூன்று பேர் அண்மையில் கைது செய்யப்பட்டனர்.

அவர்களின் 15 நாள் நீதிமன்ற காவல் இன்று நிறைவடைந்ததையடுத்து, மூன்று பேரும் காணொலி காட்சி மூலம் கோவை மகிளா நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர்.

எஸ்ஐ வில்சன் கொலை... கோவையில் என்ஐஏ தீவிர சோதனை!

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி, முருகானந்தம் உள்ளிட்ட மூன்று பேரின் நீதிமன்ற காவலை பிப்ரவரி 3 ஆம் தேதி வரை நீட்டித்து உத்தரவிட்டார்.

இதனிடையே மூவருக்கும் ஆண்மை பரிசோதனை செய்ய அனுமதி கோரி சிபிஐ தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவை விசாரித்த நீதிபதி, மூவருக்கும் ஆண்மை பரிசோதனை செய்ய அனுமதி வழங்கியும் உத்தரவிட்டார்.

அடுத்த செய்தி