ஆப்நகரம்

அதே கண்கள் பட பாணியில் ஆண்களை ஏமாற்றி பணம் பறித்த கோவை பெண்!

மேட்ரிமானி மூலம் ஆண்களை திருமணம் செய்வதாக ஏமாற்றி பணம் பறித்த சுருதி என்ற பெண்ணை கோவை சைபர் கிரைம் போலீசார் கைது செய்துள்ளனர்

Samayam Tamil 12 Jan 2018, 1:04 pm
மேட்ரிமானி மூலம் ஆண்களை திருமணம் செய்வதாக ஏமாற்றி பணம் பறித்த சுருதி என்ற பெண்ணை கோவை சைபர் கிரைம் போலீசார் கைது செய்துள்ளனர்.
Samayam Tamil covai girl cheated on matrimony websites arrested by coimbatore cyber crime police
அதே கண்கள் பட பாணியில் ஆண்களை ஏமாற்றி பணம் பறித்த கோவை பெண்!


சென்னையைச் சேர்ந்த பாலமுருகன் என்பவர் ஜெர்மனியில் பணியாற்றி வருகிறார். இவர் மேட்ரிமானி தளத்தில் சுருதி என்ற பெண்ணுடன் பழகி, திருமணம் செய்ய முடிவு செய்துள்ளனர்.

இதையடுத்து, சுருதி தனது தாய்க்கு உடல்நிலை சரியில்லை என்று கூறி பாலமுருகனிடம் ரூ.45 லட்சம் கேட்டுள்ளார். பாலமுருகனும் வருங்கால மனைவிக்கு என்று நம்பி அந்தப் பணத்தை அவரிடம் அளித்துள்ளார். ஆனால், பணத்தைப் பெற்ற பின் சுருதி பாலமுருகனுடனான தொடர்பைத் துண்டித்துள்ளார்.

தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த பாலமுருகன், சுருதி குறித்து கோவை சைபர் கிரைமில் புகார் அளித்துள்ளார். அந்தப் புகாரின் அடிப்படையில் விசாரணை செய்த போலீசார், பி.என்.பாளையத்தைச் சேர்ந்த சுருதி மற்றும் அவரின் தாய் சித்ரா மற்றும் தந்தை என கருதப்படும் பிரசன்னா என்ற மூவரைக் கைது செய்துள்ளனர்.

இதைத் தொடர்ந்து நடந்த விசாரணையில், சுருதி மேட்ரிமானி மூலம் பலரைத் தனது வலையில் சிக்க வைத்து, அவர்களிடமிருந்து ஏமாற்றி பணம் பறித்ததைக் கண்டறிந்துள்ளனர். மேலும், பல ஊர்களில் இவர் மீது இதுபோன்ற மோசடி வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதையும் கண்டறிந்தனர்.

அடுத்த செய்தி