ஆப்நகரம்

கோவையில் ஆக்சிஜன் தட்டுபாடே இல்லையா, வெண்டிலேட்டர் எத்தனை?: முழு விவரம்!

கோவையில் உள்ள அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் எத்தனை ஆக்ஸிஜன் படுக்கை வசதிகள் உள்ளன என்பது குறித்த தகவல்கள் வெளியாகி பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

Samayam Tamil 23 Apr 2021, 4:08 pm
கோவையில் கொரோனா வைரஸ் தொற்று பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதன் காரணமாக மருத்துவமனைகளில் ஆக்சிஜன் வசதியை அதிகரிக்க அடுத்த கட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
Samayam Tamil கோவையில் வெண்டிலேட்டர் படுக்கை வசதி உள்ளதா, ஆக்சிஜன் தட்டுபாடே இல்லையா?: முழு விவரம்


இத்தகைய சூழலில் நோயாளிகளுக்குச் செயற்கை சுவாசம் அளிக்கப்படுகிறது. இந்தியா முழுவதும் ஆக்சிஜன் சிலிண்டர் வசதியுடன் கூடிய படுக்கைகள் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதாகச் செய்திகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்துகிறது. கோவையில் உள்ள மருத்துவமனைகளில் ஆக்சிஜன் சிலிண்டர் வசதியுடன் கூடிய படுக்கை வசதிகள் எத்தனை உள்ளன என்பது குறித்த விவரங்கள் இப்போது வெளியாகியுள்ளன.

அதன்படி கோவை அரசு மருத்துவமனையில் 917 படுக்கை வசதிகளுடன் கொரோனா சிறப்பு வார்டு அமைக்கப்பட்டுள்ளது. இதில் சுமார் 500 படுக்கைகளுக்கு ஆக்ஸிஜன் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் 50 சதவீத படுக்கைகள் மட்டுமே நிரம்பியுள்ளது.

அரசு மருத்துவமனையைப் பொறுத்தவரை நாளொன்றுக்கு 5 கிலோ லிட்டர் வரை மட்டுமே ஆக்ஸிஜன் பயன்படுத்தப்பட்டுள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. தரவுகள்படி தற்போது 13 கிலோ லிட்டர் ஆக்சிஜன் இருப்பு வைக்கப்படுகிறது.

தேசிய விளையாட்டுப் போட்டியில் கோவை பெண் தங்கம் ஜெயத்து அசத்தல்!

இஎஸ்ஐ மருத்துவமனையைப் பொறுத்தவரை 300 படுக்கைகளுக்கு ஆக்ஸிஜன் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. அனைத்து படுக்கைகளிலும் நோயாளிகள் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அங்கு நாளொன்றிற்கு 3 கிலோ லிட்டர் ஆக்ஸிஜன் தேவை உள்ளது.

தற்போது 11 கிலோ லிட்டர் ஆகிச்ஜன் இருப்பு வைக்கக் கூடிய ஆக்ஸிஜன் உருளை வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. கோவை மாவட்டத்தில் உள்ள 40க்கும் மேற்பட்ட தனியார் மருத்துவமனைகளில் கொரோனா நோயாளிகள் சிகிச்சையில் உள்ளனர்.

மொத்தம் 2 ஆயிரத்து 986 படுக்கை வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. இதில் ஆக்ஸிஜன் வசதியுடன் ஆயிரத்து 777 படுக்கைகள் உள்ளன. இதில் 67 சதவீதம் நிரம்பியுள்ளன. அதாவது ஆயிரத்து 184 படுக்கைகள் நிரம்பியுள்ளன. மீதம் 593 படுக்கைகள் காலியாக உள்ளன. இதனால் மக்கள் அச்சப்படத் தேவையில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அடுத்த செய்தி