ஆப்நகரம்

கொரோனாவால் மகன் மரணம்: அதிர்ச்சியில் கோவை தாயும் பலி!

கோவை மாவட்டத்தில் கொரோனா பாதிப்பிற்கு ஆளான மகன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்த செய்தி கேட்டு தாய் அதிர்ச்சியில் பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Samayam Tamil 27 May 2021, 1:46 pm
கோவை சிங்காநல்லூர் நீலிகோணம்பாளையம் பகுதியைச் சேர்ந்த 48 வயது தொழிலாளி. இவருக்குத் திருமணமாகி ஒரு மகன் உள்ளார்.
Samayam Tamil கொரோனாவால் மகன் மரணம்: அதிர்ச்சியில் கோவை தாயும் பலி!


இவர் தாயாக்கு 70 வயது. தனது வீட்டில் வைத்து பாசத்துடன் கவனித்து வந்தார். 70 வயது தாயும் தனது ஒரே மகன் மீது அளவுகடந்த அன்புடன் வைத்திருந்தார். இந்த சூழலில் கடந்த சில நாட்களுக்கு முன்பு குறிப்பிட்ட தொழிலாளிக்கு திடீரென உடல்நிலை குறைவு ஏற்பட்டது.

உடனே அவரை கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காகச் சேர்த்தனர். அப்போது அவருக்கு கொரோனா தொற்று இருப்பது தெரியவந்தது. இதையடுத்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.

கரும்பூஞ்சைக்குக் கோவை மருத்துவமனையில் மருந்து இல்லை: அப்பாக்காக கதறும் மகள்!
இதன் காரணமாக அவரது தாயும் கடும் வேதனையுடன் இருந்து வந்துள்ளார். அவ்வப்போது மயக்கம் போட்டும் விழுந்துள்ளார். இதற்கிடையே சிகிச்சை பெற்று வந்த 48 வயது தொழிலாளி, திடீரென உடல்நிலை மோசமாகி சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.

அவர் இறந்த தகவல் அவரது தாயாருக்குத் தெரிவிக்கப்பட்டது. மகன் இறந்ததைக் கேட்டு அதிர்ச்சி அடைந்த அவரது தாயார் திடீரென மயங்கி விழுந்தார். அவரை குடும்பத்தினர் தட்டி எழுப்பிப் பார்த்தபோது அவர் இறந்தது தெரியவந்தது. தனது அன்பு மகன் இறந்த செய்தியைக் கேட்டதும் தாயும் உயிரிழந்தது அந்த பகுதியில் உள்ள மக்களை நெகிழச் செய்துள்ளது.

அடுத்த செய்தி