ஆப்நகரம்

கோவை: மாவட்ட அளவிலான சைக்கிள் பந்தயத்தில் பட்டைய கிளப்பிய பள்ளி மாணவர்கள்!!

கோவை மாவட்டத்தில், தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பாக மாவட்ட அளவிலான சைக்கிள் பந்தயம் நடைபெற்றது.

Samayam Tamil 2 Oct 2018, 5:35 pm
கோவை மாவட்டத்தில் நடைபெற்ற மாவட்ட அளவிலான சைக்கிள் பந்தியத்தில், நூற்றுக்கணக்கான பள்ளி மாணவர்கள் கலந்து கொண்டனர்.
Samayam Tamil மாவட்ட அளவிலான சைக்கிள் பந்தயத்தில் பட்டைய கிளப்பிய பள்ளி மாணவர்கள்!!
மாவட்ட அளவிலான சைக்கிள் பந்தயத்தில் பட்டைய கிளப்பிய பள்ளி மாணவர்கள்!!


தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பாக, கோவை மாவட்டத்தில் உள்ள ரேஸ் கோர்ஸில் மாவட்ட அளவிலான சைக்கிள் பந்தயம் நடைபெற்றது. இதில், மாவட்டம் முழுவதும் இருந்து சுமார் 200க்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டனர்.

போட்டியில் பங்கேற்ற மாணவர்களுக்கு 11, 13, 15, 17 என்ற வயது அடிப்படையில் 2.5கிமீ, 5கிமீ, 7.5கிமீ மற்றும் 12.5கிமீ தொலைவிற்கு பந்தயம் நடத்தப்பட்டது. இதில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கும் மாணவிகளுக்கும் பரிசுகள் வழங்கப்பட்டன.

முன்னதாக, இந்த சைக்கிள் பந்தயத்தை காவல்துறை துணை ஆணையர் சுஜித் குமார் கொடியசைத்து துவங்கி வைத்தார். அந்த விழாவில் கோவை மாவட்ட சைக்கிள் ஓட்டுநர் சங்கத்தின் தலைவர் ஜே.கிருஷ்ணமூர்த்தியும் உடன் இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

அடுத்த செய்தி