ஆப்நகரம்

பக்கத்து வீட்டுக்காரருடன் தகராறு: நிருபருக்கு அரிவாள் வெட்டு

பக்கத்து வீட்டுக்காரர் அரிவாளால் வெட்டியதில் படுகாயமடைந்த நிருபர், சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

Samayam Tamil 3 May 2020, 9:08 pm
முன்பகை காரணமாக, பக்கத்து வீட்டுக்காரர் அரிவாளால் வெட்டியதில் காயமடைந்த நிருபர், சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். பட்டப்பகலில் நடைபெற்ற இச்சம்பவம் கோவை மாநகர பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Samayam Tamil reporter


கோவை கணபதி அருகே உள்ள இந்திய உணவுக் கழகம் சாலையிலுள்ள சுபாஸ் நகரில் வசித்து வருபவர் ரகுநாதன். இவர் நாளிதழ் ஒன்றில் கோவை மாவட்ட நிருபராக பணியாற்றி வருகிறார்.

இவருக்கும், இவரது வீட்டின் அருகே வசிக்கும் ராமச்சந்திரன் என்பவருக்கும் முன்பகை இருந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் இன்று ராமச்சந்திரன் தமது வீட்டருகே வாழை மரத்தை அரிவாள் கொண்டு சுத்தம் செய்து வந்துள்ளார்.

கோவையில் மேலும் 3 பேருக்கு கொரோனா; பாதிப்பு எண்ணிக்கை 145 ஆக உயர்வு

அப்போது அவரது வீட்டின் அருகே ரகுநாதன் தனது இர சக்கர வாகனத்தை நிறுத்தியதாகவும், இதுதொடர்பாக இருவருக்கும் வாய் தகராறு ஏற்பட்டுள்ளது. தகராறு முற்றவே, ஆத்திரமைடந்த ராமச்சந்திரன் தன்னிடம் இருந்த அரிவாளால் ரகுநாதனின் தலையின் பின்புறம் வெட்டியதாக தெரிகிறது.

இதில் தலையில் பலத்த காயமடைந்த ரகுநாதன், சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். பட்டப்பகலில் நடைபெற்ற இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

அடுத்த செய்தி