ஆப்நகரம்

கோவை அருகே தலித் மக்கள் மீது ஆதிக்க சாதியினர் தாக்குதல்!

கோவை அருகே தலித் மக்கள் மீது ஆதிக்க சாதியினர் நடத்திய தாக்குதலில், 10க்கும் அதிகமானோர் காயமடைந்தனர்.

TNN 12 Apr 2017, 10:36 pm
கோவை அருகே தலித் மக்கள் மீது ஆதிக்க சாதியினர் நடத்திய தாக்குதலில், 10க்கும் அதிகமானோர் காயமடைந்தனர்.
Samayam Tamil dalits assaulted in tn village
கோவை அருகே தலித் மக்கள் மீது ஆதிக்க சாதியினர் தாக்குதல்!


அங்குள்ள புள்ளைகவுண்டன்புதுர் கிராமத்தில் இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது. இங்கு, 500 குடும்பத்தினர் வசிக்கின்றனர். இவர்களில், 40 குடும்பத்தினர் தலித் வகுப்பைச் சேர்ந்த மக்கள்.

இந்நிலையில், சமீபத்தில் நடைபெற்ற கோயில் திருவிழாவின்போது, தலித் பெண் ஒருவரிடம் ஆதிக்க சாதி ஆண் ஒருவர் முறைகேடாக நடந்துகொண்டதாகக் கூறப்படுகிறது.

இதனை தலித் சமூகத்தைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் எதிர்த்துக் கேட்டுள்ளார். இதையடுத்து, ஆத்திரமடைந்த ஆதிக்க சாதி ஆண்கள் பலரும் தலித் மக்களின் வீடுகளை சூறையாடியதோடு, அங்கிருந்தவர்கள் மீதும் கொலைவெறி தாக்குதல் நடத்தியுள்ளனர்.

இதில், 10க்கும் அதிகமானோர் படுகாயமடைந்தனர். அவர்கள் கோவை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். இதுபற்றி போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

As many as nine dalit men from a village near Thondamuthur in Coimbatore sustained injuries after they were attacked by a group of non-dalits on Tuesday evening.

அடுத்த செய்தி