ஆப்நகரம்

இறைவன் அழைக்கிறார்: கடிதம் எழுதிவிட்டு தூக்கில் தொங்கிய இளைஞர்!

இறைவன் அழைத்ததாக கடிதம் எழுதி வைத்து விட்டு இளைஞர் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

Samayam Tamil 21 Jul 2020, 11:04 pm
தர்மபுரி மாவட்டத்தைச் சேர்ந்த பழனி என்பவரது மகன் மகாதேவன் (23). இவர் தமிழ்நாடு காவல் துறையில் பணிக்கு தேர்வு எழுதிய நிலையில், தேர்வில் தோல்வி அடைந்ததாக கூறப்படுகிறது.
Samayam Tamil கோப்புப்படம்
கோப்புப்படம்


இதனால் விரக்தியில் இருந்த மகாதேவன் கடந்த 26ஆம் தேதி சிவன் தன்னை அழைப்பதாகவும் தான் அவரிடம் செல்வதாகவும் பெற்றோர் மற்றும் உறவினர்களுக்கு குறுஞ் செய்தி அனுப்பி விட்டு தனது செல்போனை அணைத்து விட்டதாக தெரிகிறது.

இந்த நிலையில் நேற்று ஆடி அமாவாசை தினம் என்பதால் தடையை மீறி யாரும் வெள்ளியங்கிரி மலைக் கோவிலுக்கு சென்று விடக்கூடாது என்பதற்காக, மலையில் வனத்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.

கே.எஸ்.அழகிரி: கமலாலயத்தை காங்கிரஸ் கட்சி நிச்சயம் வாங்கும். ஆனால்...

அப்போது ஏழாவது மலையின் உச்சியில் இளைஞர் ஒருவர் இறந்து ஐந்து நாட்கள் ஆன நிலையில் தூக்கில் சடலமாக இருந்ததை கண்ட வனத்துறையினர் அவரிடம் இருந்த ஆவணங்களை கைப்பற்றி சோதனையிட்டுள்ளனர். அதில், இறந்த நபர் தர்மபுரி மாவட்டத்தைச் சேர்ந்த மகாதேவன் என்பது தெரியவந்துள்ளது.

இதைத் தொடர்ந்து அவரிடம் இருந்து கடிதம் கைபற்றப்பட்டு, ஆலாந்துறை காவல் நிலையத்திற்கு தகவல் அளிக்கப்பட்டது. தகவலின்பேரில் ஆலாந்துறை காவல் துறையினர் மகாதேவனின் உடலை சம்பவ இடத்தில் இருந்து மீட்டுள்ளனர்.

அடுத்த செய்தி