ஆப்நகரம்

சொத்துவரி இவங்கலாம் செலுத்தவில்லை, பட்டியல் வெளியீடு: ஜப்தி செய்யப்படும் என எச்சரிக்கை!

கோவை மாவட்டத்தில் சொத்து வரி செலுத்தத் தவறி விட்டு நிலுவையில் வைத்துள்ள முதல் 100 பேரின் பட்டியலை வெளியிட்ட கோவை மாநகராட்சி கடும் எச்சரிக்கைகளை விடுத்துள்ளது...

Samayam Tamil 28 Oct 2020, 4:27 pm
கோவையில் சொத்து வரி செலுத்தத் தவறிய, நிலுவைத் தொகை அதிகமாக வைத்திருக்கும் 100 பேரின் பட்டியலை மாநகராட்சி நிர்வாகம் அதிரடியாக வெளியிட்டது. சொத்துவரி செலுத்தத் தவறியவர்கள் வீடுகளுக்கு வழங்கப்பட்டுள்ள குடிநீர் குழாய் இணைப்பு துண்டிக்கப்படுவதுடன், வீட்டை சப்தி செய்யும் நடவடிக்கையும் மேற்கொள்ளப்படும் என எச்சரிக்கை விடுத்துள்ளது.
Samayam Tamil சொத்துவரி இவங்கலாம் செலுத்தவில்லை, பட்டியல் வெளியீடு: ஜப்தி செய்யப்படும் என எச்சரிக்கை!
சொத்துவரி இவங்கலாம் செலுத்தவில்லை, பட்டியல் வெளியீடு: ஜப்தி செய்யப்படும் என எச்சரிக்கை!


கோவை மாநகராட்சியில் ஏராளமான தொழில் நிறுவனங்கள், கல்வி நிறுவனங்கள், வணிக மையங்கள் அமைந்துள்ளன. இவற்றில் பெரும்பாலான நிறுவனங்கள் முறையாகச் சொத்து வரி செலுத்தாமல் காலதாமதம் செய்து வருவதால் மாநகராட்சி நிர்வாகத்திற்குப் பெரியளவில் இழப்பு ஏற்படுகின்றது.

இதையடுத்து சொத்துவரியைச் செலுத்த மாநகராட்சி நிர்வாகம் பல முறை அவகாசம் அளித்தது. எனினும் பிரபல கல்வி நிறுவனங்கள் உட்பட முக்கிய நிறுவனங்கள் சொத்துவரி செலுத்தாமல் காலதாமதம் செய்து வருகின்றன. இந்த சூழலில் கோவையில் சொத்து வரி செலுத்தத் தவறிய, நிலுவைத் தொகை அதிகமாக வைத்திருக்கும் 100 நிறுவனங்களின் பட்டியலைக் கோவை மாநகராட்சி நிர்வாகம் வெளியிட்டுள்ளது.

அதன்படி எஸ்என்ஆர் சன்ஸ் குழுமம் ரூ. 3 கோடியே 21 லட்சத்து 88 ஆயிரத்து 178உம், பிஎஸ்ஜி கலை அறிவியல் கல்லூரி நிர்வாகம் ரூ. ஒரு கோடியே 50 லட்சத்து 49 ஆயிரத்து 174உம், விஎல்பி கல்வி குழுமம் ரூ. ஒரு கோடியே 16 லட்சத்து 80 ஆயிரத்து 467உம் சொத்து வரி செலுத்தப்படாமல் நிலுவையில் உள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மக்களே உஷார், குடியிருப்புப் பகுதியில் துணிகர கொள்ளை சம்பவம்!

இதேபோல் கோவையில் உள்ள பிரபல கல்வி நிறுவனங்களான ஹிந்துஸ்தான் கல்லூரி, என்ஜிபி கல்லூரி, பிஎஸ்ஜி கிருஷ்ணம்மாள் மகளிர் கல்லூரி, ஆவிலா கான்வென்ட் பள்ளி, பாரதிய வித்தியாபவன் பள்ளி, அமிர்தா வித்தியாலய பள்ளி , கேஜிஐஎஸ்எல் டிரஸ்ட் ஆகிய பிரபல நிறுவனங்களின் பெயர்கள் சொத்துவரி செலுத்தத் தவறியவர்களின் பட்டியலில் இடம் பெற்றுள்ளன.

இந்தப் பட்டியலை வெளியிட்ட மாநகராட்சி நிர்வாகம், சொத்துவரி செலுத்தத் தவறியவர்களுக்குக் குடிநீர் குழாய் இணைப்பு துண்டிக்கப்படும் என்றும், தேவைப்பட்டால் மாநகராட்சி விதிப்படி சப்தி நடவடிக்கை கூட எடுக்கப்படும் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

மாநகராட்சி ஆணையர் குமாரவேல் பாண்டியனின் இந்த அதிரடி நடவடிக்கையால் சொத்துவரி செலுத்தாமல் இழுத்தடிப்பு செய்து வரும் நிறுவனங்கள் கலக்கம் அடைந்துள்ளன.

அடுத்த செய்தி