ஆப்நகரம்

பட்டையைக் கிளப்பும் கோவை விமான நிலையம், சூப்பர் வசதி இனி!

கோவை விமான நிலையத்தில் கூடுதலாக 7 விமானங்களை நிறுத்தும் வசதி செய்யப்பட்டுள்ளது. இதற்கான கட்டுமான பணிகள் நடந்து வந்த சூழலில் அவை நிறைவடைய உள்ளதாகக் கோவை விமான நிலைய இயக்குநர் மகாலிங்கம் தெரிவித்துள்ளார்.

Samayam Tamil 20 Nov 2020, 9:17 am
கோவை சர்வதேச விமான நிலையம், கோவை உள்ளிட்ட சுற்றுப்புறங்களைச் சேர்ந்த 7 மாவட்ட மக்களுக்குப் பயனளித்து வருகின்றனர். இந்த சூழலில், குறிப்பிட்ட விமான நிலையத்தில் விரிவாக்க பணிகளைச் செயல்படுத்துவதில் மிகுந்த காலதாமதம் நிலவி வந்தது. எனினும் பயணிகள் போக்குவரத்து, விமானங்கள் இயக்கம், சரக்கு போக்குவரத்தைக் கையாளுதல் உள்ளிட்ட அனைத்து துறைகளிலும் நிலையான வளர்ச்சியை விமான நிலையம் தக்கவைத்துள்ளது.
Samayam Tamil பட்டையைக் கிளப்பும் கோவை விமான நிலையம், சூப்பர் வசதி இனி!
பட்டையைக் கிளப்பும் கோவை விமான நிலையம், சூப்பர் வசதி இனி!


கொரோனா வைரஸ் நோய்த் தொற்று காரணமாக ஏற்பட்ட தாக்கத்திலிருந்து மெதுவாக விமான போக்குவரத்து மீண்டு சுறுசுறுப்படைந்து வருகிறது. விமான நிலையத்தின் எதிர்கால தேவையைக் கருத்தில் கொண்டு தற்போது இருக்கும் இடத்தில் பல்வேறு மேம்பாட்டுப் பணிகளை விமான நிலைய நிர்வாகம் மேற்கொண்டு வருகிறது.

இதன் ஒரு பகுதியாக ஏற்கனவே விமான நிலையத்தில் பயன்பாட்டிலிருந்த 2 ஏரோ பிரிட்ஜ் (விமானங்களில் பயணிகள் ஏறி இறங்கப் பயன்படுத்தப்படும் எந்திரம்) மாற்றியமைக்கப்பட்டன. மேலும் விமான நிறுத்துமிடங்களின் எண்ணிக்கை உயர்த்தப்பட்டு கட்டுமான பணிகள் தொடங்கப்பட்டது. அந்தப் பணிகள் நிறைவடையும் நிலையில் உள்ளது. இந்த நடவடிக்கைகளால் விமான நிலையம் புதுப்பொலிவு பெற்றுள்ளது.

விமான நிலைய விரிவாக்கப் பணிகள் குறித்து கோவை சர்வதேச விமான நிலைய இயக்குநர் ஆர். மகாலிங்கம் கூறியதாவது:-
விமான நிலையத்தில் ஏற்கெனவே பல ஆண்டுகள் பயன்படுத்திய காரணத்தால் 2 ஏரோ பிரிட்ஜ் புதிதாக மாற்றப்பட்டன. தற்பொழுது கூடுதலாக மேலும் 2 ஏரோ பிரிட்ஜ் வாங்கப்பட்டு, அவை பயன்பாட்டுக்குக் கொண்டு வரப்பட்டுள்ளன.

சதாப்தி எக்ஸ்பிரஸ் ரயில் ரத்து... இதுதான் காரணமாம்!

விமானங்கள் நிறுத்துமிடம் கட்டுமானத்தைப் பொருத்தவரை ஏற்கனவே 9 ‘ஏப்ரான்’ உள்ளன. தற்போது கூடுதலாக 7 விமானங்கள் நிறுத்தும் வசதி செய்யப்படுகிறது. இதற்கான இடம் கட்டப்பட்டுள்ளன. இவற்றில் 5 ‘ஏர்பஸ் 320’ வகையைச் சேர்ந்த பெரிய விமானங்கள் நிறுத்துவதற்கும் மற்ற இரண்டு ‘ஏ.டி.ஆர்’ என்று சொல்லக்கூடிய சிறிய வகை விமானங்கள் நிறுத்துவதற்கும் பயன்படுத்தப்படும்.

கொரோனா வைரஸ் பரவல் காரணமாகக் கட்டுமான பணிகள் பணிகள் பாதிக்கப்பட்டன. தற்பொழுது அனைத்து பணிகளும் நிறைவடையும் தறுவாயில் உள்ளன. மிக விரைவில் இவை செயல்பாட்டுக்குக் கொண்டுவரப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.

அடுத்த செய்தி