ஆப்நகரம்

தீபாவளி ஷாப்பிங்: கோவையில் மக்கள் கவலை, என்ன செய்யப் போகிறது போலீஸ்?

தீபாவளி காரணமாகப் பொருட்கள் வாங்கக் கடை வீதிகளில் மக்கள் குவிந்துள்ள நிலையில், திருடர்களைப் பிடிக்கும் விதமாகக் கண்காணிப்பு கோபுரம் அமைத்து போலீசார் தீவிர கண்காணிப்புகளை முன்னெடுத்துள்ளனர்.

Samayam Tamil 5 Nov 2020, 2:00 pm
கோவை ஒப்பணக்கார வீதி ராஜ வீதி பெரிய கடைவீதி கிராஸ்கட் சாலையில் ஏராளமான ஜவுளி கடைகள் உள்ளன. இந்த ஜவுளிக்கடைகளில் விழாக்காலங்களில் கூட்டம் அதிகமாகக் காணப்படும்.
Samayam Tamil தீபாவளி ஷாப்பிங்: கோவையில் மக்கள் கவலை, என்ன செய்யப் போகிறது போலீஸ்?
தீபாவளி ஷாப்பிங்: கோவையில் மக்கள் கவலை, என்ன செய்யப் போகிறது போலீஸ்?


நாட்டில் இந்து மத நம்பிக்கையாளர்கள் வரும் 14ஆம் தேதியைத் தீபாவளி பண்டிகையாகக் கொண்டாடுகின்றனர். இதை முன்னிட்டு கடை வீதிகளில் புத்தாடை வாங்குவதற்காக மக்கள் அதிகளவில் படையெடுக்கத் தொடங்கிவிட்டனர்.

எங்குப் பார்த்தாலும் மக்கள் தலைகள் மட்டுமே தெரிகின்றன. கொரோனா காலமான இப்போது மக்கள் அனைவரும் சமூக இடைவெளி என்பதையே மறந்து கூட்டம் கூட்டமாக முண்டியடித்துச் செல்கின்றனர்.

இதன் காரணமாகக் குறிப்பிட்ட சாலைகளில் ஏற்படும் போக்குவரத்து நெரிசல் காரணமாக வாகன ஓட்டிகள் மிகவும் அவதிக்குள்ளாகி வருகிறார்கள். கடந்த ஆண்டு தீபாவளிக்கு 20 நாட்களுக்கு முன்னதாகவே பெரிய கடை வீதி ஒப்பணக்கார வீதி பகுதிகளில் மக்கள் நடந்து செல்ல சாலையின் ஒரு புறமாகத் தடுப்புகள் அமைத்து போலீசார் போக்குவரத்தைச் சரி செய்தனர்.

என்னது அரசு அலுவலகங்களில் மோடி படமா? -இது என்ன புது உருட்டா இருக்கு!

மேலும் தீபாவளி திருடர்களைப் பிடிக்கும் விதமாகக் கண்காணிப்பு கோபுரம் அமைத்து கேமரா மூலம் கண்காணித்து வந்தனர். ஆனால், இந்த ஆண்டு தீபாவளிக்கு இன்னும் 10 நாட்களே உள்ள நிலையில் துணி வாங்குவதற்காக மக்கள் அதிகளவில் வரத் தொடங்கிவிட்டனர்.

இதையடுத்து எதிர் வரும் நாட்களில் மக்கள் கூட்டம் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது எனத் தெரிகிறது. இதனைப் பயன்படுத்தி தீபாவளி திருடர்கள் மக்களிடமிருந்து நகை பணத்தைப் பறிக்க வாய்ப்புள்ளது. இதுகுறித்து கவலை தெரிவித்துள்ள மாவட்ட மக்கள், “தவறுகள் நடப்பதற்கு முன்பாகவே, எங்கள் பாதுகாப்பை போலீசார் உறுதி செய்ய வேண்டும்” என்றனர்.

அடுத்த செய்தி