ஆப்நகரம்

தேமுதிகவிற்கு வருத்தம், கோவை செல்வராஜைக் கைது செய்: எஸ்பியிடம் மனு!

கேப்டன் விஜயகாந்த்தை அவதூறாகப் பேசிய அதிமுகவினர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி கோவை மாவட்ட எஸ்பியிடம் தேமுதிக முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் தினகரன் மனு அளித்தார்.

Samayam Tamil 21 Dec 2020, 12:16 pm
தேமுதிக சூலூர் தொகுதி முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் தினகரன் தலைமையில் நூற்றுக்கும் மேற்பட்ட திமுகவினர் திங்கட்கிழமை கையில் கட்சிக் கொடியை ஏந்தியபடி எஸ்பி அலுவலகத்தை முற்றுகையிட்டு மனு ஒன்றை அளித்தனர்.
Samayam Tamil தேமுதிகவிற்கு வருத்தம், கோவை செல்வராஜைக் கைது செய்: எஸ்பியிடம் மனு!
தேமுதிகவிற்கு வருத்தம், கோவை செல்வராஜைக் கைது செய்: எஸ்பியிடம் மனு!


தினகரன் கொடுத்த மனுவில், “கடந்த 14ஆம் தேதி தினத்தந்தி செய்தி தொலைக்காட்சியில் நடைபெற்ற கருத்தரங்கில் அதிமுக செய்தி தொடர்பாளர் செல்வராஜ் என்பவர் எங்களுடைய தலைவர் விஜயகாந்த் எதிர்வரும் சட்டமன்ற தேர்தலோடு அரசியலிலிருந்து காணாமல் போவார் எனச் சொல்லி, தொடர்ந்து கேப்டனை அவதூறாகப் பேசினார். இதை நாங்கள் வன்மையாகக் கண்டிக்கிறோம்.

அதிமுகவின் இந்த செயல் தேமுதிக கட்சி தொண்டர்களுக்கு மன வருத்தத்தை ஏற்படுத்தி உள்ளது. ஆதலால் அவதூறாகப் பேசிய அதிமுக பிரமுகர் செல்வராஜ் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும்” எனக் கூறப்பட்டிருந்தது.

காணாமல் போன விஜயகாந்த்திற்காகக் கோவையில் 83 பேர் கைது!

எஸ்பி அலுவலகத்திற்குச் சென்று முறையீட்டு மனு அளித்தால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு நிலவியது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அப்பகுதியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.

அடுத்த செய்தி